தாறுமாறா அடிவாங்கிய வரலக்ஷ்மி சரத்குமார்… தலையில் பீறிட்டு வெளியான ரத்தம்…

0
Follow on Google News

நிஜ வாழ்வில் மனிதர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை அப்படியே சினிமாவில் கண் முன் கொண்டு வருபவர் இயக்குனர் பாலா. தனது படைப்பிற்கு எந்த ஒரு குறையும் வந்து விடக்கூடாது என திரைக்கதையிலும் சரி, நடிகை நடிகர்களிடம் சரி எந்த ஒரு சமரசமும் செய்யாமல் காரராக இருப்பவர். படத்தின் காட்சிகள் உணர்வு பூர்வமாக படமாக்க எந்த ஒரு எல்லைக்கும் போக தயங்க மாட்டார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்தது தான் தாரை தப்பட்டை படம். இதில் நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘சூறாவளி’ என்ற கரகாட்டக்காரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் . இப்படத்தில் நடிகை வரலட்சுமி பல இடங்களில் அடி வாங்கி இருப்பார்.

இப்படத்தில் அறிமுகமான புதுமுக வில்லன் ஆர்.கே சுரேஷ் வரலட்சுமியை அடிக்கும் காட்சிகளில் முதலில் மெதுவாகத்தான் அடிப்பாராம். பின்னர் இயக்குனர் பாலாவின் திட்டிற்கு பயந்து உண்மையாகவே வரலட்சுமி நெஞ்சில் ஏறி மதித்திருப்பார். இதில் அவருக்கு நெஞ்சில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு சீனில் போலி கண்ணாடிக்கு பதில் நிஜ கண்ணாடியை வில்லனிடம் கொடுத்து வரலட்சுமி அடிக்க வைத்திருப்பார் பாலா.

அதில் நெற்றியில் கண்ணாடி துண்டு கிழித்து வரலட்சுமிக்கு ஆறு தையல் போடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் தாரை தப்பட்டை பட கிளைமாக்ஸ் சீனில் சசிகுமார் மற்றும் ஆர்.கே சுரேஷ் இருவருக்கும் இடையே பயங்கரமான சண்டை நடந்திருக்கும். அதில் ஆர்.கே சுரேஷ் கீழே விழுவது போல் ஒரு காட்சி அமைப்பில், சீன் தத்துரூபமாக இருக்க வேண்டும் என்று உண்மையிலேயே அவரை கீழே விழ வைத்திருந்தார் இயக்குனர் பாலா.

இயக்குனர் பாலா நடிகர்களை கடுமையாக தாக்கி திரைப்படங்களில் நடிக்க வைப்பதாக காலம் காலமாக ஒரு கண்ணோட்டம் திரைத்துறையில் இருந்து வருகிறது. அதன்படியே அவரது படத்தின் படப்பிடிப்பு தளக் காட்சிகளும் இருந்து வருகிறது. பாலாவின் படங்களில் நடிப்பது என்றாலே பல நடிகர் நடிகைகள் பயப்படுவார்கள். ஏனென்றால் தன்னை அந்த கதாபாத்திரத்திற்கு அர்ப்பணிக்க வேண்டி வரும். அதற்காக எவ்வளவு வலிகளையும் தாங்கிக் கொள்ள வேண்டும்.

இதற்கு ஒப்புக் கொள்பவர்கள் மட்டும் தான் இயக்குனர் பாலா படங்களில் நடிப்பார். அந்த வகையில் இயக்குனர் பாலாவிடம் கொஞ்சமாக அடிவாங்கி பெயர் வாங்கிய நடிகை என்றால் அது லைலாவாகத்தான் இருக்க முடியும். மேலும் பாலாவின் பரதேசி படத்தில் நடித்த அனைவருமே அந்த காலத்தில் நிலவிய பஞ்சம் மற்றும் அடிமைத்தனத்தை கண்முன் நிறுத்த நிஜமாகவே அடி வாங்கி வேதனை பட்டார்கலாம்.

இதில் பாலா குச்சியை வைத்து மிரட்டும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அச்சமயத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. அதேபோல் வணங்கான் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக மலையாள நடிகை ஒருவர் படத்திலிருந்து வெளியேறி பரபரப்பு புகார் ஒன்றை கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here