தங்க செருப்பு… வைர சேலை… மனைவி வரலட்சுமியை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய கணவர் நிக்கலோஸ்..

0
Follow on Google News

நடிகர் சரத்குமார் மகள் வரலக்ஷ்மி திருமணம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வரலக்ஷ்மி திருமண புகைப்படத்தில் நடிகர் சரத்குமார் முதல் மனைவி சாயா மற்றும் இரண்டாவது மனைவி ராதிகா சரத்குமார் இருவரும் ஒரே புகைப்படத்தில் இருப்பது குறித்து சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்தாலும் கூட, அந்த புகைப்படத்தில் சரத்குமார் முதல் மனைவி சாயா மகள்கள், மற்றும் ராதிகா மகள் மற்றும் மகன் என அனைவரும் மகிழ்ச்சியாக நாங்கெல்லாம் ஒரே குடும்பம் என வெளிப்படுத்தியுள்ளது. விமர்சனம் செய்கின்றவர்களுக்கு சரியான பதிலடியாக அமைத்துள்ளது.

மேலும் ராதிகா தன்னுடைய சொந்த மகள் திருமணம் போன்று, வரலக்ஷ்மி திருமணத்தை முன்னின்று நடத்துவது, வரலட்சுமியும் ராதிகாவுக்கு கொடுத்து வரும் முக்கியத்துவம், அவர்கள் குடும்பத்தில் அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, உங்களுக்கு என்னடா வந்துச்சு, என நடிகர் சரத்குமார் குடும்பத்தை அநாகரிகமாக விமர்சனம் செய்கின்றவர்களுக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம் செய்துள்ள நிக்கோலஸ் மும்பையில் மிக பெரிய தொழில் அதிபராக இருந்து வருகிறார், ஏற்கனவே நிக்கோலஸ் திருமணம் முடிந்து ஒரு மகள் உள்ள நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். மகள் நிக்கோலஸ் உடன் இருந்து வருகிறது. உடல் பயிற்சி செய்வதில் ஆர்வமான நிக்கோலஸ் அவருடைய மகளையும் உடல் பயிற்சியில் ஆர்வம் உள்ளவராக வளர்த்து வருகிறார்.

நிக்கோலஸ் மும்பையில் பல கோடி மதிப்புள்ள ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறார். அவருடைய தந்தை 70 காலகட்டத்தில் தொடங்கிய இந்த ஆர்ட் கேலரி, மகன் நிக்கோலஸ் தலையெடுத்த பின்பு பல கோடி லாபம் ஈட்டும் வகையில் இந்த ஆர்ட் கேலரியை உருவாக்கியுள்ளார் நிக்கோலஸ், இந்த ஆர்ட் கேலரிக்கு இந்தி சினிமாவில் உள்ள ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், ஷாருக்கான், என பல முன்னனி நடிகர்கள் விசிட் அடிப்பது வழக்கம்.

ஆர்ட் கேலரி மூலம் கோடிகளில் வருமானம் சம்பாதித்து வரும் நிக்கோலஸ் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் இருவரும் ஆரம்பத்தில் சந்தித்து நண்பர்களாக பழகி வந்துள்ளார்கள், பின்பு இவர்களின் நட்பு காதலாக உருவெடுத்துள்ளது, இதனை தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் தற்பொழுது இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்து வருகிறது. சினிமா துறையில் அனைவரிடம் நடிகை வரலக்ஷ்மி நட்பில் இருந்து வருவதால், சினிமா பிரபலங்கள் பலரு நேரில் வந்து வரலட்சுமியை வாழ்த்திவிட்டு செல்கிறார்கள்.

இந்நிலையில் வரலக்ஷ்மி திருமணம் குறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், பல தகவல்களை பகிர்ந்துள்ளார், அதில் தாய்லாந்தில் ஒரு சொகுசு கப்பலில் வைத்து நிக்கோலாய் வரலட்சுமிக்கு தாலி கட்டியுள்ளார். ஆனால் வெளிநாடுகளில் திருமணம் நடந்தால் இந்தியாவில் செல்லாது என்பதால் சென்னை தாஜ் ஹோட்டலிலும் திருமணம் நடந்தது. பின்பு லீலா பேலஸ் ஹோட்டலில் திருமண வரவேற்பு நடந்தது என தெரிவித்த பயில்வான்.

மேலும் நிக்கோலாய் தனது மனைவி வரலட்சுமிக்கு தங்கத்தில் செருப்பு கொடுத்ததாகவும், அதேபோல் வைரத்தில் சேலை கொடுத்தார். மேலும் தன்னுடைய 200 கோடி ரூபாய் சொத்தை வரலட்சுமி பெயரில் எழுதி வைத்திருக்கிறார் நிக்கோலஸ் என பரபரப்பாக பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளது, இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்க என பலரும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடதக்கது.