என் முகத்தில் குத்து விட்டவர்களுக்கு செருப்படி கொடுத்துள்ளேன்… நடிகை வனிதா சொன்ன பகீர்…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்தது சரி என தொடர்ந்து வனிதா பேசி வந்தார். இந்த நிலையில், தன் மீது பிரதீப் ஆதரவாளர் தாக்குதல் நடத்தியதாக சமீபத்தில் வனிதா பரபரப்பை ஏற்ப்படுத்தி இருந்தார்.

நடிகை வனிதா நள்ளிரவில் தனது காரில் வீட்டிற்கு வந்தபோது திடீரென தன் முன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தோன்றி பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்கறீங்களா? அதுக்கு நீ என்ன சப்போர்ட் வேறயா? என்று கூறி முகத்தில் பலமாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த சம்பவத்தைப் காவல் நிலையத்தில் தெரிவிக்கும்படி என்னை வற்புறுத்தினார்கள்.

ஆனால், இந்த சம்பவம் பற்றி சொன்னால் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தாக்கியவரை தேடினேன். நான் திரையில் தோன்றும் உடல் நிலையில் இல்லாததால் எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

நடிகை வனிதா முகம் பஞ்சரானது குறித்து பலரும் நடிகை வனிதா நடமாடுகிறார் என கருத்து தெரிவித்து வந்தனர், இது தொடர்பாக நடிகை கஸ்தூரி “அடிச்சவன் யாரோ, அதுக்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் reviewவால் வந்த வினை. போலீசுக்கும் போகமாட்டார். வனிதாவின் ருசிகரமான பொய்கள் யூடியூப்க்கும் விஜய் டிவிக்கும் contentக்கு வேண்டுமானால் பயன்படும், போலீஸிடம் வியாபாரமாகுமா வனிதா முகத்தில் விழுந்த கும்மாங் குத்துவை கிண்டல் செய்யும் விதத்தில் கருத்து தெரிவித்து இருந்தார் நடிகை கஸ்தூரி.

இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொடூர தாக்குதல் பற்றி தற்பொழுது பேசிய நடிகை வனிதா, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக மாறிய பல்லவி பிரஷாந்த் ரசிகர்கள் ரன்னராக மாறியஅமர்தீப் காரை அடித்து உடைத்தனர். இதனை பற்றி பேசிய தமிழ் ரசிகர்கள், நல்ல வேளையாக எங்கள் ஊரில் இந்த மாதிரி எல்லாம் இல்லை என்று கமெண்டுகளை பதிவிட்டனர்.

அங்கு காரை தான் உடைத்தார்கள். இங்கு என்னுடைய முகத்தையே உடைத்து விட்டார்கள். ஆனால் எனக்கு நடந்த தாக்குதல் பற்றி நான் சொல்வதால் யாரும் நம்ப மறுக்கிறார்கள், அவர்களை யாரப்பா அடிப்பார்? அவரே விழுந்திருப்பார் என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் உண்மையிலேயே கீழே விழுந்தால் தலையில் அடிப்பட்டு எனக்கு கட்டு போட்ட பட்டிருக்கும்.இப்படி என்னுடைய கண்ணில் இவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டிருக்காது.

கிட்டத்தட்ட நான் தாக்கப்பட்டு ஒரு மாதம் ஆகப்போகிறது, இன்றும் நான் கண்ணாடி போட்டு தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன். புது வருடத்தில் எல்லாம் சரியாகி விட்டு, நான் பழைய வனிதாவாக மீண்டும் வருவேன். என்னை தாக்கியவர்களுக்கு நான் கொடுத்த செருப்படி இந்த ஒரு மாதம் நான் தொடர்ச்சியாக பிக் பாஸ் குறித்து விமர்சனம் செய்தது, வெளியே பயணம் செய்தது தான் என தெரிவித்த நடிகை வனிதா

என்னை எதுவும் தடுக்க முடியாது என்று சொல்வதற்காகவே நான் இப்படி செய்கிறேன், நான் எந்த ஒரு சூழலிலும் சோர்ந்து படுத்து விடமாட்டேன், என்னை யாராலும் உடைக்க முடியாது. தெலுங்கில் உள்ளது போலே அதே அளவுக்கான வன்மம் நம் ஊரிலும் இருக்கிறது. இப்போது இருக்கக்கூடிய போட்டியாளர்களுக்கு சோசியல் மீடியாவில் இருந்து கற்பழிப்பு குறித்தான மிரட்டல்கள், கொலை மிரட்டல்கள் உள்ளிட்டவை வந்து கொண்டே இருக்கின்றன என கண் கலங்கும் வகையில் வேதனையுடன் பேசினார் நடிகை வனிதா விஜயகுமார்.