யார் செய்யாத தவறையா நான் செஞ்சேன்… கண் கலங்கி கதறி அழுத வனிதா விஜயகுமார்…

0
Follow on Google News

வனிதா என்றாலே, சர்ச்சை, சண்டை, திருமணம் என்ற சொல் தான் அனைவர் நினைவிற்கும் வரும். ஆனால் கடந்த சில நாட்களாகவே வனிதா, மிகவும் எமோஷனலாக, கண்ணீர் விட்டு உருகும் சம்பவம் தான் அதிக அளவு நிகழ்கிறது. இதற்கு காரணம் வேறு யாரும் இல்லை, அவரின் ஒரே ஒரு மகனா விஜய் ஶ்ரீ ஹரி தான். வனிதா விஜயகுமாரின் மகனான விஜய் ஸ்ரீஹரி, டைரக்டர் பிரபுசாலமன் இயக்கும் மேம்போ என்ற படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவுக்குள் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கிறார்.

இந்நிலையில் தான், மீண்டும் தன் மகனைப் பற்றி வனிதா கண்கலங்கி பேசிய நிகழ்வு பலரது மனதையும் உருக்கியுள்ளது. விஜய் ஸ்ரீஹரி ஹீரோவாக அறிமுகம் ஆவது பற்றி பேசிய வனிதா, இது ரொம்ப மோசமான நிலைமை தான், இருந்தாலும் நான் ஒரு அம்மாவாக இதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த செய்தியை பார்த்த பலர் எனக்கு போன் செய்து வாழ்த்தினார்கள். என் மகன் ஹீரோவாக நடிக்கிறான், இந்த நேரத்தில் நானும் ஹீரோயினாக நடித்துக்கொண்டு இருப்பதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

மேலும் இது என் அம்மாவிற்கு கூட கிடைக்கல, ஏன் எந்த நடிகைக்கும் கிடைக்காத ஒன்று. அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்என கூறியிருந்தார். மேலும் எனக்கு ஸ்ரீஹரி பிறக்கும் போது 18 வயசு தான், அப்போது எனக்கு எதுவுமே தெரியாத வயது. அப்படி இருந்தாலும், அந்த வயதில் நான் தவறு செய்து விட்டேனே என்று ஒரு முறை கூட நினைத்தது இல்லை. என் மகன் வளர்ந்து இன்றைக்கு ஹீரோவாக பார்க்கும் போது, ஒரு அம்மாவாக மகிழ்ச்சியை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

அவன் சின்ன வயதில் இருந்தே திறமையானவன், நல்ல புத்திசாலி நிச்சயம் இந்த படம் அவனுக்கு சிறப்பான எதிர்காலத்தை கொடுக்கும் என பேசியிருந்தார். அதோடு லைம் லைட்டில் இல்லாத ஸ்ரீஹரியை, பல ஆண்டுகளாக நான் போட்டோவில் தான் பார்த்து இருக்கிறேன், இன்னும் நேரில் பார்க்கவில்லை. அவன் கண், என் கண் போலவே இருக்கு, நான் பாதி, அருண் அண்ணா பாதி சாயல் இருக்கிறது என்றார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர் ஒருவர் மகனுடன் பேச வாய்ப்பு கிடைத்தால் பேசுவீர்களா என்ற கேள்விக்கு, அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கண்கலங்கி எமோஷனல் ஆகியிருந்தார். இந்நிலையில் தான், வனிதாவை அவர் மகனுக்கு பிடிக்காமல் போனதற்கு காரணமே இவர் நினைக்கும் போதெல்லாம் ஒவ்வொருவரை திருமணம் செய்து கொண்டே இருந்ததுதான் என சொல்லப்படுகிறது.

அதே போல் தான் விஜயகுமாரின் குடும்பமும் வனிதாவை ஒதுக்கி வைத்து விட்டது. முதலில் 2000 ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்ட வனிதா, பிறகு 2006இல் அவரை விவாகரத்து செய்தார். அப்போதுதான் வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். இந்த விவாகரத்துக்கு பிறகு தான், மகன் ஆகாசுடனும், மகள் வனிதாவுடனும் பிரிந்து சென்றனர்.

அப்போது சென்ற மகன் தான் இன்றுவரை அம்மாவை தேடி வரவே இல்லை. ஆனால் விவாகரத்தான அடுத்த வருடமே 2007 இல் தொழிலதிபர் ஆனந்த்ராஜ் என்பவரை வனிதா இரண்டாவதாக திருமணம் செய்து 2012ல் விவாகரத்து செய்தார். அதேபோல் அதற்கு அடுத்த வருடம் 2013இல் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் லிவிங் டு கெதரில் இருந்த வனிதா 2017-இல் அந்த உறவிலிருந்து விலகினார்.

பின்னர் நான்காவதாக 2020இல் பீட்டர் பால் என்ற நபரை திருமணம் செய்தார். ஆனால் மூன்றே மாதத்தில் பிரிந்துவிட்டார். இப்படி நினைத்தபோதெல்லாம் திருமணம் செய்யும் அம்மாவை எந்த மகனுக்கு தான் பிடிக்கும், வனிதா தற்போது போடும் இந்த கண்ணீர் நாடகத்திற்கு எல்லாம் அவர் மகன் இறங்கி வந்து வனிதாவுடன் இணைய மாட்டார் என்றும் பல சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றது.