கண் கலங்கிய திரிஷா… என்ன தம்பி ..நீங்கள் இப்படி செய்யலாமா.? விஜய்யிடம் நேரடியாக கேட்ட திரிஷா அம்மா..

0
Follow on Google News

நடிகை திரிஷா – விஜய் இருவருக்கும் இடையிலான கிசு கிசு சர்ச்சை தற்பொழுது மிக பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து பல படங்கள் விஜய் – திரிஷா இணைந்து நடித்து, இந்த ஜோடி சேர்ந்தால் அது வெற்றி கூட்டணி என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் குருவி படத்திற்கு பின்பு ஜோடி சேர்ந்து நடிக்காத விஜய் – திரிஷா சுமார் 14 வருட இடைவெளிக்கு பின்பு மீண்டும் லியோ படத்தில் இணைந்து நடித்தனர்.

லியோ படத்தில் திரிஷா நடிப்பதற்கு முக்கிய காரணமே விஜய் தான் என்றும், அவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடன் தெரிவித்து, லியோ படத்தில் திரிஷா நடிக்க சிபாரிசு செய்தார் என பரவலாக பேசப்பட்டு வந்தது, மேலும் லியோ படம் வெளியாவதற்கு முன்பு விஜய் நடித்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜய் மனைவி பங்கேற்காத நிலையில், விஜய்க்கு அவரது மனைவிக்கு இடையில் பிரச்சனை, விஜயை விட்டு பிரிந்து சங்கீதா லண்டனில் தனியாக இருக்கிறார், அதனால் தான் வாரிசு ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு வரவில்லை என்கிற பேச்சும் அடிபட்டது.

இந்நிலையில் விஜய் – திரிஷா இருவரும் லியோ படத்தில் இணைந்து நடித்த பின்பு தொடர்ந்து இவர்கள் இருவர் பற்றி கிசு கிசு அடுத்தடுத்து வெளியானது, அதாவது விஜய் நீலாங்கரை வீட்டின் அருகே திரிஷா புதிய வீடு வாங்கி விஜய் வீட்டின் அருகே குடியேறிவிட்டார், மேலும் விஜய் புதிய அலுவலகம் இருக்கும் அப்பார்மெண்டிலும் புதியதாக திரிஷா ஒரு வீடு வாங்கி உள்ளார். இப்படி விஜய் – திரிஷா குறித்து பல செய்திகள் தொடர்ந்து வெளியாகி விஜய் – திரிஷா கிசு கிசுக்களை மேலும் பரபரப்பு அடைய செய்தது.

இப்படி தொடர்ந்து விஜய் – திரிஷா இருவருக்கும் இடையில் பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கையில், பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் விஜய் – திரிஷா குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார், அதில் திரிஷாவின் திருமண நிச்சயதார்த்தம் நின்றுபோனதற்கு காரணமே விஜய்தான் என்று சொன்னார்கள். ஆனால் அதில் எல்லாம் உண்மை இல்லை என தெரிவித்த அந்த பத்திரிகையாளர்.

விஜயின் அரசியல் வருகையின் காரணமாக தான், அவருடைய இமேஜ்ஜை டேமேஜ் செய்வதற்காக விஜய் – திரிஷா குறித்து பல கிசு கிசுக்கள் வெளியாகி கொண்டிருக்கிறது, ஆனால் விஜய் இமேஜ் இதனால் டேமேஜ் ஆகி கொண்டிருப்பது உண்மை தான். விஜய் நடித்த போக்கிரி படம் மிக பெரிய ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து அந்த படத்தின் சக்ஸஸ் மீட்டிற்கு திரிஷா தன்னையும் விஜய் அழைப்பார் என எதிர்பார்த்து இருந்துள்ளார்.

ஆனால் விஜய் அழைக்கவில்லை. இதனால் ரெம்பவே மனதளவில் கஷ்ட்டப்பட்டு, வீட்டில் விஜய் நம்மை அழைக்கவில்லையே என தேம்பி தேம்பி அழுதுள்ளார் திரிஷா. உடனே விஜய்க்கு போன் போட்ட திரிஷா அம்மா, வீட்டில் திரிஷா நீங்கள் போக்கிரி பட சக்ஸஸ் நிகழ்வுக்கு அழைக்கவில்லை என தேம்பி தேம்பி அழுவதை தெரிவித்து, மேலும் நீங்க திரிஷா கூட நடித்த ஆதி படம் ஃப்ளாப் ஆனதுனால எங்களை ஓரங்கட்டுறீங்களா?’ என விஜய்யிடம் நேரடியாக கேட்டுள்ளார் திரிஷா தாய்.

அதற்கு விஜய் அய்யோ… அப்படியெல்லாம் இல்லை நாளைக்கு உடனே மீட் பண்ணலாம் என தெறிவித்தவர். திரிஷாவை சமாதானம் செய்ய அடுத்த நாளே ஒரு நட்சத்திர ஓட்டலில் மத்திய சாப்பாடு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் விஜய். மேலும் அப்போது திரிஷா குறித்த ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதனால் தான் உங்களை அழைத்தால் இது குறித்து உங்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புவார்கள் என்று தான் உங்களை அழைக்க வேயில்லை என தெரிவித்த விஜய் என கூறப்படுகிறது. மேலும் இதன் பின்பு குருவி படத்தில் விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடித்த திரிஷா அதன் பின்பு 14 வருடத்திற்கு பின்பு லியோ படத்தில் இணைந்தது இந்த ஜோடி என்பது குறிப்பிடதக்கது.