தேடி வந்த திரிஷா… வேண்டவே வேண்டாம் என தனுஷ் மறுக்க என்ன காரணம் தெரியுமா..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் தற்பொழுது நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் தனுஷ் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படம் அவருடைய ஐம்பதாவது திரைப்படம் என்பதால், இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ்.

அந்த வகையில் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் தனுஷ் அவரே நடித்து இயக்கவும் உள்ளார். ஏற்கனவே நடிகர் தனுஷ் பவர் பாண்டி படத்தை இயக்கியுள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் வேறு ஒரு தயாரிப்பாளர் பெயர் இடம் பெற்று இருந்தாலும், முழுக்க முழுக்க அந்த படத்தின் இயக்குனர் வேலையை செய்தது தனுஷ் தான் என்பது சினிமா வட்டாரத்தில் அனைவரும் அறிந்த ஓன்று.

பல திறமைகள் கொண்ட நடிகர் தனுஷ், நடிப்பது மட்டுமின்றி பாடல் பாடுவது, படம் இயக்குவது, நடிப்பது என நடிகர் கமலஹாசன் போன்று சினிமாவில் உள்ள அனைத்து துறைகளையும் கற்று கைதேர்ந்து வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் அவரது ஐம்பதாவது படத்தை அவரே இயக்க இருப்பதால், அந்தப் படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தை முடித்த உடனே தனுஷ் நடிக்க இருக்கும் 50-வது படத்திற்கான பூஜையை தொடங்கி, அந்த படத்திற்கான படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தவும் திட்டமிட்டுள்ளார் தனுஷ். இந்நிலையில் 50வது படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வில் இருக்கும் தனுஷ், அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கங்கானா ராணுவத்தை நடிக்க வைபதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால் தனுஷ் தரப்பில் இருந்து கங்கானா ராணுவத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையில் கங்கனா தற்பொழுது தன்னிடம் கால் சீட்டு இல்லை, அதனால் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தில் என்னால் நடிக்க முடியாது என கை விரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை திரிஷா முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதன் மூலம் தற்பொழுது, நயன்தாரா விட்டுச்சென்ற நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக்கொண்டு விடலாம் என்கிற எண்ணத்தில் உள்ளார்.

அந்த வகையில் நடிகர் அஜித், விஜய் இருவரின் படத்தில் இடம் பெரும் முயற்சியில் ஈடுபட்டு அது நல்ல பலனை திரிஷாவுக்கு கொடுத்துள்ளது. விஜய் சிபாரிசியில் தற்போது லியோ படத்தில் நடித்து வரும் நடிகை திரிஷா அடுத்து விஜய் நடிக்கும் வெங்கட் பிரபு இயக்கம் படத்திலும் திரிஷா இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போன்று நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்திலும் திரிஷா தான் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அஜித், விஜய் இருவரின் சிபாரிசின் பேரில் தான் திரிஷா அவர்கள் படத்தில் இடம்பெற்றுள்ளார்.இந்நிலையில் அஜித், விஜய் படத்தில் இடம்பெற்றது போன்று, தனுஷ் நடிக்க இருக்கும் ஐம்பதாவது படத்திலும் இடம்பெற வேண்டும் என்கின்ற முயற்சியில் இறங்கிய திரிஷா.

ஏற்கனவே தனுசுடன் கொடி படத்தில் நடித்த போது அவருடன் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி, தனுஷ் நடிக்க இருக்கும் 50-வது படத்தில் நடிக்கும் வாய்ப்பிற்காக முயற்சி செய்துள்ளார் திரிஷா. ஆனால் திரிஷாவை வேண்டாம் என தனுஷ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.மேலும் திரிஷாவுக்கு பதில் சூரரைப் போற்று படத்தில் நடித்த அபர்ணா முரளியிடம் பேசி கமிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை திரிஷாவுடன் இணைந்து தனுஷ் நடித்த கொடி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது, அதன் வகையில் திரிஷாவும் இணைந்து படம் நடித்தால் அது ராசி இல்லாத படமாக மாறிவிடும். தன்னுடைய ஐம்பதாவது திரைப்படம் திரிஷா என்ட்ரி கொடுத்தால், அது ராசி இல்லாததாக மாறிவிடும் என்கின்ற செண்டிமெண்டுக்காக, தன்னுடன் திரிஷா நடிக்க விருப்பப்பட்டு வந்தாலும் தனுஷ் வேண்டாம் என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.