விஜய் – சங்கீதா பிரச்சனைக்கு காரணம் திரிஷாவா.? முக்கிய பிரபலம் சொன்ன பரபரப்பு..

0
Follow on Google News

நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் திரை விமர்சனம் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றியும் செய்திகளை வெளியிடுவார். சொல்லப் போனால், பிரபலங்களின் வீட்டிற்குள் இருந்து பார்த்தது போல, அவர்களின் குடும்ப விவகாரங்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பார். ஒரு கட்டத்திற்கு மேல் பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகளை தரக்குறைவாகவும் கொச்சையாகவும் பேசி ஆரம்பித்து விட்டார்.

இதனால் கடுப்பான பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி போலீசில் புகார் கொடுத்த சம்பவங்களும் உண்டு. அதுமட்டுமின்றி, செய்தியாளர் சந்திப்பின் போது, நடிகர் நடிகைகளைக் கடுப்பேத்துவது போலவே கேள்வி எழுப்பக் கூடிய சர்ச்சைக்குரிய நபரும் ஆவார். இப்படிப்பட்ட பயில்வான் ரங்கநாதன் தற்போது, நடிகரின் விஜய் பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பார்க்கலாம்.. நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை SACக்கும் இடையே நீண்ட காலமாக மனக்கசப்பு இருந்து வருகிறது. இந்த ஒரு துணுக்குச் செய்தியை வைத்தே பலரும் விஜய் பற்றி அவதூறாக பேசி வந்தனர். விஜயைச் சுற்றி வட்டமிடும் பல்வேறு பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என்று கூறலாம். இந்நிலையில், விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பளிச்சென்று பேசியிருக்கிறார்.

அவர் கூறியதாவது:”நீரடித்து நீர் விலகாது என்பதுப் போல, நடிகர் விஜய் நிச்சயம் ஒரு நாள் அப்பாவுடன் சேர்ந்து விடுவார் என்று நான் முன்பே கூறியிருந்தேன்.. அது நிரூபணம் ஆகும் வகையில், இப்போது நடிகர் விஜய் அவரது அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதைக் கேள்விப் பட்டதும் பதறியடித்துக் கொண்டு வெளிநாட்டிலிருந்து தந்தையைப் பார்க்க வந்திருக்கிறார்” என்றார்.

இவ்வாறு விஜயின் அப்பா பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த பயில்வான், விஜய் பற்றி பரவும் மற்றொரு கிசுகிசுவுக்கும் எண்டு கார்டு போட்டிருக்கிறார். நடிகை திரிஷா கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய அதிரடி ஹிட் படங்களையடுத்து ஐந்தாவது முறையாக மீண்டும் விஜய்க்கு ஜோடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. அங்கு படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் விறுவிறுவென வைரலாகியது.

இதனைத் தொடர்ந்து பலரும் நடிகர் விஜயும் திரிஷாவும் ஒன்றாக சுற்றுலா சென்று கொண்டிருக்கின்றனர், இதனையறிந்த சங்கீதா விஜயை விட்டு பிரிந்து விட்டார் என்றெல்லாம் யூடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் படுமோசமாக கிசுகிசு வெளியாகின. இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் நடிகர் விஜய் மற்றும் திரிஷா காதில் போட்டுக்கொள்ளவில்லை, இருப்பினும், பயில்வான் ரங்கநாதன் வதந்திகளை பரப்புபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், விஜய்-திரிஷா பற்றி பரவும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை, விஜய் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எப்போதும் போல சந்தோசமாகத்தான் வாழ்ந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இயக்குனர் மிஷ்கின் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையேயான தகராறு பற்றி விவரித்த பயில்வான் ரங்கநாதன், தளபதி என விஜய்யை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், மிஷ்கின் தேவையில்லாமல் விஜய்யை ஒருமையில் பேசியது ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது, இதனால் மிஷ்கினுக்கு விஜய் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.