த்ரிஷாவை அப்படியே…. பஞ்சு மாதிரி… மன்சூர் அலிகான் கேவலமான பேச்சு… பொங்கி எழுந்த திரையுலகம்…

0
Follow on Google News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து இருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், இந்த படத்தில் நடித்த திரிஷா குறித்து பேசும் போது ‘இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. நானும் திரிஷா இருக்கிறார்.. லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம்.. அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு.. ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால் இங்கே அப்படி காட்சி இல்லை. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று ‘ என்று கூறி இருந்தார்.

மன்சூர் அலிகானின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தற்போது நடிகை த்ரிஷா மன்சூர் அலி கான் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், சமீபத்தில் மன்சூர் அலி கான் என்னை பற்றி அறுவறுக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ பதிவு ஒன்று என் கவனத்திற்கு வந்தது.

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது அவமரியாதையான பெண் வெறுப்புமிக்க பாலியல் அத்துமீறல் பேச்சு. அவர் இதற்கெல்லாம் ஆசைப்படலாம். ஆனால் இவ்வளவு மோசமான ஒருவருடன் திரையை பகிர்ந்துகொள்ளாததற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இனி என் திரை வாழ்க்கையில், இது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். இவரைப்போன்ற நபர்கள் மனித குலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

த்ரிஷாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இதற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது த்ரிஷாவுக்கு ஆதரவு குரல்கள் எழுந்துவருகின்றனர். இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி என பலரும் த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து, மன்சூர் அலிகானும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர்.

இதில் லோகேஷ் கனகராஜ் இட்டுள்ள பதிவில், “நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றியவர்கள். மன்சூர் அலிகானின் இந்த பெண் வெறுப்புக் கருத்துக்களைக் கேட்டு மனமுடைந்து, கோபமடைந்தேன். எந்தவொரு துறையிலுமே பெண்கள், சக கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான மரியாதை கொடுக்கப்படவேண்டும். அது இன்றியமையாதது. மன்சூர் அலிகானின் இந்த பேச்சை நான் முற்றிலும் கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள பதிவில், “பல வகைகளில் இது மோசமான பேச்சு. பெண்களைப் பற்றி இந்த மனிதர் கொண்டிருக்கும் எண்ணங்களை நினைத்துப் பார்க்கவே அவமானமாக இருக்கிறது. அதையும் மீறி என்ன தைரியத்தில் (!) இதையெல்லாம் எந்தவித யோசனையும் இல்லாமல் பொதுவெளியில் பேசுகிறார்? Shame on you” என்றுள்ளார்.

லோகேஷ் கனகராஜுக்கு, மன்சூர் அலிகான் மிகவும் பிடித்த நடிகர். சொல்லப்போனால் கைதி படத்தை மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் எழுதினார். ஆனால், சில காரணத்தால் அவரை அந்த படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை. இதனால் தான் லியோ படத்தில் அவருக்கு ஒரு முக்கிய ரோலை கொடுத்தார். அப்படி இருந்தும் மன்சூரின் தவறை சுட்டிகாட்டிய லோகேஷிற்கு ரசிகர்கள் பலர் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.