நீண்ட வருடமாகவே எங்களுக்குள் அது இருக்கும் ….. விஜய்யுடன் இருக்கும் தொடர்பு பற்றி போட்டுடைத்த திரிஷா…

0
Follow on Google News

நடிகர் விஜய் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான லியோ படம் விஜய் ரசிகர்களளால் கொண்டாடப்பட்ட அதேவேளையில், பொதுவான ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், படம் வெளியாகிய முதல் நாளிலேயே எதிர்பாராத அளவிற்கு வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனாலேயே தயாரிப்பு நிறுவனமும் படக்குழுவினரும், படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்று விடும் என்ற முடிவுக்கு வந்தனர். மேலும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 1 ஆம் தேதி படத்தின் வெற்றி விழாவை வெகு விமர்சையாக நடத்தி முடித்தனர். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்களும் படக்குழுவினரும் பங்கேற்று படம் குறித்துப் பேசினர்.

அப்போது, மேடையில் ஏறிய நடிகை திரிஷா, விஜய்க்கும் அவருக்குமான தொடர்பு குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தார். இது விஜய் ரசிகர்களை வியப்படையச் செய்துள்ளது. நடிகை திரிஷா கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய அதிரடி ஹிட் படங்களையடுத்து ஐந்தாவது முறையாக மீண்டும் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்துள்ளார். விஜய் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தவர் த்ரிஷா.

அப்படி இருக்கையில், கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும் லியோ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தது ரசிகர்களை உற்சாகப் படுத்தியது. நேற்று நடைபெற்ற வெற்றிவிழா நிகழ்ச்சியில் திரிஷா முதலில் படத்தின் வெற்றி குறித்து பேசினார். அப்போது “பொதுவாக, அமைதியும், வெற்றியும் தான் சரியான பதிலடியாக இருக்கும் என்று சொல்வார்கள். அது லியோவிற்கு நடந்து இருக்கிறது. லியோவின் வெற்றிக்கு ரசிகர்கள் தான் காரணம், எல்லோருக்கு முதலில் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

லியோ ஷூட்டிங் ஒரு சுற்றுலா போல இருந்தது. ” என்று படத்தில் ஒர்க் பண்ண அனுபவம் குறித்துப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து பேசிய திரிஷா, இயக்குனர் லோகேஷ் பற்றியும் ஹீரோ விஜய் பற்றியும் மனம் திறந்தார். இயக்குனர் லோகேஷ் பற்றி பேசுகையில், “நான் பல வெற்றி இயக்குநர்கள் உடன் வேலை பார்த்து இருக்கிறேன். அதில் சிலர் மட்டும் தான் அவர்கள் அவர்களாவே இருப்பர். அதில் ஒருவராக லோகேஷ் இருக்கிறார்.

அவர் என்னிடம் சில வருடங்களுக்கு முன்னர் இந்த கதையை சொன்னார். அவர் சொன்ன படியே எடுத்தார். எந்த மாற்றமும் செய்யவில்லை. நல்ல வேளை அவர் என்னை படத்தில் கொல்லவில்லை” என்று நகைச்சுவையாகப் பேசினார். அதேபோல், நடிகர் விஜயுடனான சினிமாப் பயணம் பற்றி பேசிய திரிஷா, “ஒரு ஸ்கூலில் படித்த நண்பனை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் எனக்கு விஜய்யை பார்க்கும் போது இதில் இருந்தது.

சினிமா துறையில் நான் அதிக வருடங்களாக நட்பில் இருக்கும் நபர் விஜய் தான். விஜய்யிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். நடிகை திரிஷாவின் இந்த பேச்சுக்கு அரங்கில் இருந்த ரசிகர்கள் ஆராவாரம் செய்து கூச்சலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.