சுனைனா திருமணம் செய்யும் துபாய் சேக் ரெம்ப மோசம்… முதல் மனைவி சொன்ன ஷாக்…

0
Follow on Google News

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான சுனைனா, தன் நடிப்பில் வெளியாகியிருந்த நீர்ப்பறவை படத்தில், எப்போது தன் கணவர் வருவார் என, வழி மேல் விழி வைத்து காத்திருந்தது போலவே, ரியல் லைஃப்லும் 35 வயது வரை சிங்கிளாகவே இருந்து தன் கணவருக்காக காத்திருந்தார். அப்படி காத்திருந்த இவர், தற்போது, ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளை வைத்திருக்கும் துபாய் நாட்டைச் சேர்ந்த பிரபல youtuber-ஐ நிச்சயம் செய்து திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், நடிகை சுனைனாவை நிச்சயம் செய்த அன்று, காலித் அல் அமெரியின் முதல் மனைவியான சலமா முஹம்மது, இவர்கள் இருவரின் நிச்சய போட்டோவை பார்த்து கடுப்பில் செய்த சில செயல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது. காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த சுனைனா, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு நிச்சயமான விஷயத்தை சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்.

ஆனால் யாருடன் நிச்சயமானது என்பதை ரிவில் செய்யாமல் சஸ்பென்சாக வைத்திருந்தார். இருப்பினும் நமது ரசிகர்கள், டிடெக்டிவ் ஆபீசர்ஸ் போல் வேலை செய்து, சுனைனாவை நிச்சயம் செய்திருப்பவர், துபாயை சேர்ந்த பிரபல youtuber-ஆன காலித் அல் அமெரி தான் என கண்டுபிடித்து விட்டனர். சுனைனா தனது instagram பக்கத்தில் பகிர்ந்திருந்த, மோதிரம் மாற்றிய அதே கைகளை தான், காலித் அல் அமெரியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

மேலும், சுனைனாவின் பல போஸ்ட்களுக்கு Like போட்டதோடு, அவர் கமெண்ட்டும் செய்திருந்தார். இந்நிலையில் தான் சுனைனா திருமணம் செய்து கொள்ளப் போவது துபாய் மாப்பிள்ளை என ரசிகர்கள் உறுதி செய்தனர். ஆனால், இந்த துபாய் மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிந்ததும் அதிர்ச்சியிலும் உறைந்து போயினர். இருப்பினும், காலித் அல் அமெரி, தனது முதல் மனைவியானா சலமா முஹம்மதை, விவாகரத்து செய்து ஆறு மாதம் கழித்து தான் சுனைனாவை நிச்சயம் செய்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து, ரசிகர்கள் எப்படி சுனைனாவின் நிச்சயத்தை பார்த்து ஷாக் ஆனார்களோ, அதேபோல் தான் காலித்தின் முதல் மனைவியும், செம டென்ஷன் ஆகி கண்ணீர் விட்டும் கதறி இருக்கிறார். சலமா முஹம்மது, காலித் அல் அமெரியின் நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்த்து, தனது போனை கோபத்தில் தூக்கிப்போட்டு உடைப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது.

இதன் மூலம், இவரின் விவாகரத்தான கணவருக்கு திருமணம் ஆவதை இவர் விரும்பவில்லை போல என்றும் பலரும் கருத்துக்களை முன்வைத்து வந்தனர். அதேபோல் சலாம முஹம்மது, சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றிலும், காலித் அல் அமெரியை நினைத்து கண்கலங்கியும் அழுதி இருக்கிறார். அதில் அவர், எனக்கும், காலித்துக்கும், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி விவாகரத்தானது.

அந்த நாள்தான், என் வாழ்க்கையில் மிகுந்த அமைதியை நான் உணர்ந்த நாள் என்றும், இருப்பினும் என் வாழ்க்கையில் வந்த சில மனிதர்களையும், சில சம்பவங்களையும், நான் மன்னிக்கவே மாட்டேன் என்று பொங்கி எழுந்ததோடு, ஆனால், ஏதோ ஒரு வகையில் காலித் இன்னும் எங்கள் குடும்பத்தோடு தொடர்பில் இருப்பது போல் தான் இருக்கிறது, அவரோடு நான் இருந்த நினைவுகளை முழுமையாக மறக்க முடியவில்லை,

அதே போல், அவரின் சந்தோசம், வெற்றி, சோகம் ஆகியவை எல்லாம், என் சந்தோஷத்தையும் இன்றளவிலும் பாதிக்கிறது என்று கண்கலங்கி பேசியிருந்தார்.. இதிலிருந்து தான் காலித் அல் அமெரி, நடிகை சுனைனாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்வது, அவரின் முதல் மனைவியான சலமா முஹம்மதை பெரிதும் பாதித்திருக்கிறது என்றும், அவர் இதை விரும்பவில்லை என்றும் தெளிவாகத் தெரிய வந்திருக்கின்றது.