என்னை உனக்கு தெரியாத.? விஷாலை செருப்பால் அடிப்பேன்..! நடிகை ஶ்ரீ ரெட்டி …

0
Follow on Google News

தன்னை யார் என்றே தெரியாது என்று சொன்ன விஷாலுக்கு, நடிகை ஸ்ரீ ரெட்டி செருப்பால் பதிலடி கொடுத்திருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தற்போது மிகவும் பரபரப்பாகவும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள பிரச்னை என்றால் அது மலையாள சினிமா உலகில் நடைபெற்ற நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை பிரச்னைதான்.

முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த விரிவான விசாரணை அறிக்கையின் காரணமாக இந்தப் பிரச்னை பூதாகரமாக மாறியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் மோகன் லால் அவராகவே முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஹேமா கமிட்டி அளித்த விசாரணை அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றால், மோகன் லால் தனது பதவியை ராஜினாமா செய்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், நடிகர் விஷால் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், தமிழிலும் இதுபோன்ற சூழல் இருக்கிறதா என கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “கேரளாவில் ஹேமா கமிட்டியை போல் தமிழ்நாட்டில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வருகிறது.

அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். பட வாய்ப்புக்காக அட்ஜஸ்மெண்ட்டுக்கு யாராவாது கூப்பிட்டால் நடிகைகள் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். காலம் காலமாக தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. யாராவது தவறான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்கள் என்றால் அவர்களை செருப்பால் அடிக்கும் துணிச்சல் பெண்களுக்கு வர வேண்டும். இதுதொடர்பாக யாராவது புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

அப்போது செய்தியாளர்கள், நடிகை ஸ்ரீ ரெட்டி உங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தாரே என கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு அவர், எனக்கு ஸ்ரீ ரெட்டி யார் என்று தெரியாது. ஆனால், அவர் செய்த சேட்டைகள் எனக்கு நன்றாகத் தெரியும். உண்மை எதுவென்று தெரியாமல், ஒருவர் மீது குற்றம் சாட்டுவது தவறான செயல் என்று பதிலளித்திருந்தார்.

அதாவது, நடிகர் விஷால் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என பல பேட்டிகளில் ஸ்ரீ ரெட்டி தெரிவித்ததோடு, காவல் நிலையத்தில் புகார் அளித்தது நாம் அறிந்ததே. தற்போது விஷால் தன்னைக் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதற்கு பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி, காட்டமான ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடக்கத்திலேயே விஷாலை பெண்கள் மீது மோகம் கொண்டவர் என்று கூறி, தனது பதிவைஆரம்பித்த அவர் “வெள்ளை முடி வந்துவிட்ட அங்கிள், பெண்களைப் பற்றி பேசும் பொழுது உங்கள் நாவை அடக்கி பேசுங்கள். மீடியாவிற்கு முன் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும், பெண்களைப் பற்றி நீங்கள் உபயோகப்படுத்தும் இழிவான சொற்கள் கண்டிக்கத்தக்கது.

இந்த உலகத்திற்கு தெரியும் நீங்கள் ஒரு மிகப்பெரிய பிராடு என்று. மரியாதை உள்ள நபர் என்று உங்களை நீங்களே நினைத்துக்கொள்ள வேண்டாம். ஏற்கனவே நீங்கள் ஒரு பைத்தியம் என்பதை பல இடங்களில் நிரூபித்துள்ளீர்கள்”. உங்களுடைய வாழ்க்கையில் உங்களோடு இருந்த பெண்கள் அனைவருமே உங்களை விட்டு சென்றுவிட்டனர். உங்களுக்கு நிச்சயம் நடந்து, பின் அது ரத்த ஆவதற்கு என்ன காரணம்?. இப்படி பல கேள்விகள் இருக்கிறது, அதற்கெல்லாம் உங்களால் பதில் கூற முடியுமா?

நீங்கள் நடிகர் சங்கத்தில் பெரிய இடத்தில் இருந்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. “கர்மா” நிச்சயம் உங்களை பின்தொடர்ந்து வரும். என்னிடம் நிறைய செருப்புகள் இருக்கிறது, உங்களுக்கு அதில் ஒன்று வேண்டும் என்றால் என்னிடம் தெரிவிக்கவும் என்று விஷாலுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தற்போது ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவுதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.