கமலஹாசனை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிய சிம்ரன்..! நட்சத்திர ஓட்டலில் என்ன நடந்து தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் வாழ்க்கையில் வந்து போன நடிகைகளை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும், அவர் கிசு கிசுவில் சிக்கிய ஸ்ரீவித்யா முதல் தற்பொழுது உள்ள ஆண்ட்ரியா வரை எண்ணிக்கை ஏராளம், வாணி கணபதியை திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்த பின்பு சரிதாவை திருமணம் செய்தார், இதன் பின்பு சிம்ரன், அபிராமி, கவுதமி , பூஜா குமார், ஆண்ட்ரியா என கமல்ஹாசன் உடன் ஜோடியாக வலம் வந்த நடிகைகளை சொல்லி கொண்டே போகலாம்.

சமீபத்தில் இவருடன் ஒன்றாக சுற்றி வந்த பூஜாகுமார் தீடிரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளார், அதற்கு முன்பு சுமார் 12 வருடங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக கமல்ஹாசன் உடன் வாழ்ந்து வந்த கவுதமி தனது மகளின் பாதுகாப்பு கருதி கமல்ஹாசனை விட்டு பிரிவதாக அறிவித்தார். அதே போன்று கமல்ஹாசன் தொல்லை தாங்க முடியாமல் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு ஓட்டம் எடுத்தார் அபிராமி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பம்மல் கே சம்பந்தம் படத்தின் போது தண்னுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை சிம்ரன் உடன் காதல் கிசு கிசுவில் சிக்கினார் கமல்ஹாசன். இதன் பின்பு இந்த ஜோடி பஞ்ச தந்திரம் படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து இவர்களின் காதலை வெளி உலகத்துக்கு உறுதி செய்ததது, திருமணம் ஆகாமலே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்த கமல்ஹாசன் – சிம்ரன் ஜோடி பொது நிகழ்ச்சிகளுக்கு ஒரே காரில் ஜோடியாக வந்து சென்று கொண்டிருந்தனர்.

விரைவில் கமல்ஹாசன் – சிம்ரன் ஜோடி திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது, அவ்வப்போது கமல்ஹாசனுக்கு பணம் தேவைப்படும் போது சிம்ரன் நடிக்கும் படத்தின் சம்பளத்தை அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் அவரே வாங்கி சென்று விடுவார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த சிம்ரன் விரைவில் திருமணம் செய்ய கூடிய நபர் தான் கமல்ஹாசன் பரவாயில்லை என்று விட்டுவிடுவார் சிம்ரன் என கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் நடவடிக்கைகள் சிம்ரனுக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் அடிக்கடி கமல்ஹாசன் – சிம்ரன் இருவருக்கும் சண்டை நடைபெற்று வந்துள்ளது. கமல்ஹாசனை விட்டு சிம்ரன் விலக வேண்டும் என முடிவு செய்தாலும், கையில் காலில் விழுந்து சமாதானம் செய்து விடுவார் கமல்ஹாசன் என்று கூறப்படுகிறது, இப்படி இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை சமாதானம் என்று சென்று கொண்டிருந்த நிலையில்,

விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது, வெளிநாட்டிற்கு கலைநிகழ்ச்சிக்காக தமிழ் திரையுலகை சேர்ந்த அணைத்து நடிகர், நடிகைகளும் சென்றுள்ளனர். அப்போது ஒரே ஓட்டலில் அணைத்து நடிகர் நடிகைகளும் தங்கியிருந்துள்ளனர், அதில் கமல்ஹாசன் – சிம்ரன் இருவரும் ஒரே அறையில் தங்கி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் கமல்ஹாசனை கழுத்தை பிடித்து தங்கியிருந்த அறையில் இருந்து வெளியே தள்ளியுள்ளார் சிம்ரன்.

இந்த விஷயம் அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சினிமா துறையை சேர்ந்த அனைவர்க்கும் தெரியும் என்றும், இதன் பின்பு தான் கமல்ஹாசனை விட்டு நிரந்தரமாக சிம்ரன் பிரிந்ததாக கூறப்படுகிறது, இந்த ரகசிய தகவலை முக்கிய பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ளார். கமல்ஹாசனை விட்டு பிரிந்த சிம்ரன் மும்பையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து தற்பொழுது வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரஜினி மகள்கள் இடையே குடுமிப்பிடி சண்டை…  தலையை பிய்த்து கொண்ட ரஜினி..! இறுதியில் நடந்தது என்ன.?