மருத்துவமனையில் ஷாலினி… எட்டி கூட பார்க்காத அஜித்… மனைவி மீது பாசம் இல்லையா.?

0
Follow on Google News

அஜித் நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பல்வேறு தடங்கல்களுக்கு பிறகு சமீபத்தில் தான் மீண்டும் தொடங்கியது. அசர்பைஜான் நாட்டில் தான் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி உடல் நலக்குறைவாக இருந்ததால் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

அதற்கு கூட கணவர் அஜித் நேரில் வரவில்லை. ஒருவேளை தான் சென்னைக்கு திரும்பி வந்துவிட்டால் விடாமுயற்சி ஷூட்டிங் நின்றுவிடும், தயாரிப்பாளருக்கு தான் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் தான் அஜித் சென்னை வரவில்லையாம். இந்நிகழ்வு திரைத் துறையினரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியான கையுடன் நடிகர் அஜித் தனது பைக்கில் world டூர் செல்ல ஆரம்பித்தார். ஒரு பக்கம் அஜித் world டூர் சென்றதால் தான் விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதமானதாக சொல்லப்பட்டாலும் இன்னொரு பக்கம் அஜித் world டூர் சென்றதே படபிடிப்பு தாமதமானதால் தான் என்றும் கூறப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், பட வேலைகள் திட்டமிட்ட நேரத்தை விட தாமதமாக தான் ஆரம்பிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு அசர்பைஜானில் தொடங்கிய விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் அஜித்துடன் நடிகர்கள் ஆரவ் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குனர் மகில் திருமேனி, தான் இயக்கும் படங்களை நேரமெடுத்து பொறுமையாக தான் எடுப்பார். ஆனால் அஜித்தை பொருத்தவரை படப்பிடிப்பு ஆரம்பித்தால் அது வெகு விரைவில் முடிந்து விட வேண்டும் என்று யோசிப்பாராம்.

அதனாலையே படம் தாமதமானதால் அஜித் கடுப்பாகி இருந்தார். நடிகர் அஜித்குமார் சில நாட்களுக்கு முன்னர் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மீண்டும் பட குழுவுடன் அசர்பைஜானுக்கு சென்றார். அச்சமயத்தில் ஷாலினிக்கு முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்று நடைப்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அஜித் ஷாலினியுடன் இல்லை.

ஏற்கனவே படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால், தன்னால் இனியும் லேட்டாக கூடாது என்று நினைத்த அஜித், படப்பிடிப்பில் இருந்தவாறே மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொலைப்பேசி இணைப்பில் அவ்வப்போது இருந்ததாகவும் மனைவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்பு மருத்துவர்களிடம் அவர் பேசியதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும், படப்பிடிப்பு தளத்திலும் அவர் கொஞ்சம் பதட்டமாக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

பொதுவாகவே நடிகர் அஜித், தான் நடிக்கும் படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் தான் நடிப்பார். இது அவருக்கு சினிமா மேல் இருக்கும் பற்றை காட்டுகிறது. அந்தவகையில் தற்போது உள்ள இளம் நடிகர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு செல்லும் சூழலில் நடிகர் அஜித் தனது காதல் மனைவி பற்றி யோசிக்காமல் இவ்வாறு செய்த நிகழ்வு திரை வட்டாரங்களில் பேசும் பொருளாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here