தெலுங்கு சினிமாவை குளிர்விக்க நடிகை சங்கீதாவின் பேச்சு… ஒட்டு மொத்த தமிழருக்கும் ஏற்பட்ட அவமானம்…

0
Follow on Google News

நடிகை சங்கீதா சமீபத்தில் எனக்கு தமிழ் பிடிக்காது, இதனால் எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை என பேசி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நடிகை சங்கீதா ஒரு திரைப்பட தயாரிப்பாளர் மகள். கங்கை அமரன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சங்கீதா இந்த படத்தில் சங்கீதாவுக்கு ஜோடியாக வெங்கட் பிரபு ஹீரோவாக நடித்தார்.

அந்த வகையில் அவரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ் சினிமா என்பதை சங்கீதா மறந்துவிடக்கூடாது. அறிமுகப்படுத்தியது தமிழ் சினிமா என்பது மட்டுமல்ல பிதாமகன் என்ற படத்தில் நடித்ததின் மூலம் அவருக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்ததும் தமிழ் சினிமா தான். தமிழ் சினிமாவில் பிதாமகன் படத்தில் சங்கீதா நடித்த பின்பு தான் சங்கீதா என்கின்ற ஒரு நடிகையை இருப்பது தெரியவந்தது.

அந்த அளவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை சங்கீதாவுக்கு கொடுத்தது தமிழ் சினிமா. ஆனால் இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்த தமிழ்நாடு மக்கள் உயிருக்கு உயிராய் நேசிக்கும் தமிழை பிடிக்கவில்லை என்று சொல்வது தமிழர்கள் மத்தியில் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் நடிகை சங்கீதா. தமிழ்நாட்டில் குறிப்பாக தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம், வந்தாரை வாழவைத்த தமிழகம் என பலரை வாழ வைத்தது தமிழ் சினிமா.

அப்படி இருக்கையில் உங்களை ஆளாக்கி வளர்த்து விட்ட தமிழுக்கு நீங்க செய்யும் நன்றி கடன் இதுதானா சங்கீதா என கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது நடிகர் சங்கீதாவின் பேச்சு. தமிழ் சினிமாவில் மரியாதையே இல்லை என்று சொல்லும் நடிகை சங்கீதாவிற்கு நடிகைகளுக்கு கோவில் கட்டிய மாநிலம் தமிழ்நாடு என்பது தெரியுமா.? நஅது மட்டும் இல்லை தமிழக அரசியலில் கோலோச்சியவர்கள் தமிழ் சினிமா நடிகைகள்,

முதல்வராக தமிழ் சினிமா நடிகைகளை முதல்வராக அமர்த்தி அழகு பார்த்தவர்களும் தமிழர்கள் தான். மேலும் தமிழ் சினிமாவில் குட்டி பதமினி, நடிகை ராதிகா போன்ற நடிகைகள் தயாரிப்பாளராக சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால் எனக்கு தெலுங்கு சினிமா தான் பிடிக்கும், அங்கே என்னை மரியாதையாக வைத்திருக்கிறார்கள் என பேசும் நடிகை சங்கீதா, தற்பொழுது எனக்கு தமிழ் பிடிக்காது என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை என்று பேசும் சங்கீதா,

எனக்கு தெலுங்கு பிடிக்காது என்று தெலுங்கு சினிமா வில் பேசிவிட்டு மீண்டும் தெலுங்கு சினிமாவில் அவரால் நடிக்க முடியுமா.? தெலுங்கு ரசிகர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்களா என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது. என்னை சினிமாவில் ஒப்பந்தம் செய்ய வருவ பொழுதே சம்பளம் மிக குறைவாக பிக்ஸ் செய்கிறார் என்று சங்கீதா தெரிவித்துள்ளது, உனக்கு இஷ்டம் என்றால் நடி இல்லை என்றால் விட்டுவிட்டு செல்ல வேண்டியது தானே.!

உன்னுடைய மார்க்கெட் எவ்வளவு அதற்கு ஏற்ற மாதிரி தான் சம்பளம் கொடுப்பார்கள். அதை விட்டுவிட்டு எனக்கு தமிழே பிடிக்காது என்று சொல்வதெல்லாம் தற்பொழுது அதிகமாக தெலுங்கு சினிமாவில் நடிகை சங்கீதா நடித்து வருவதால் அங்கே இருக்கும் தெலுங்கு சினிமா துறையினரை குளிர்விப்பதற்காக இப்படி பேசி இருக்கலாம், ஆனால் தெலுங்கு சினிமாவில் நடிகைகளை எந்த அளவுக்கு நடத்துகிறார் என்பதற்கு சமீபத்தில் நடிகை அஞ்சலிக்கு மேடையில் நடந்த ஒரு அவமரியாதையே சாட்சி.

இதுபோன்று தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு நடிகைக்கு ஒரு அவமரியாதை நடந்தது உண்டா. அந்த வகையில் தமிழே பிடிக்காது என்று ஒட்டுமொத்த தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் இழிவு படுத்து வகையில் பேசிய நடிகை சங்கீதா மீது தமிழ் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் தமிழ் பிடிக்காது என்றால் தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியை ரியாலிட்டி சோக்களில் எதற்காக நடுவராக வந்து சங்கீத அமர்ந்து கொள்கிறார். அந்த வகையில் தமிழர்கள் சங்கீதா பங்குபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் அவர் தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் பலரும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து பெறுவது பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.