சமந்தாவுக்கு வந்த காதல் ப்ரொபோஸ்… சமந்தா இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் நபர் யார் தெரியுமா.?

0
Follow on Google News

சமந்தா, நாக சைதன்யாவுக்கு எப்படி ஆகஸ்ட் எட்டாம் தேதி காதலை சொன்னாரோ, அதேபோல் தற்போது நாக சைதன்யா, அதே ஆகஸ்ட் எட்டாம் தேதி நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து நிச்சயம் செய்து கொண்டார். இவர் நிச்சயம் செய்ததிலிருந்து சோசியல் மீடியாவே பற்றி எரிகிறது. குறிப்பாக சமந்தா ரசிகர்கள், நாக சைதன்யாவை கடுமையாக விமர்சித்து வருவதோடு, சமந்தாவுக்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தான் தற்போது ஒரு இளைஞர், ஒரு படி மேலே சென்று, நாக சைதன்யா போனால் என்ன, உங்களுக்கு நான் இருக்கிறேன் சமந்தா, என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என அதிரடியாக ப்ரபோஸ் செய்துள்ளார். இந்நிலையில் அதற்கு சமந்தா கொடுத்த பாசிட்டிவ் ரிப்ளை தான் தற்போது வைரலாகி வருகிறது. தென் இந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த, நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவருக்கும் நடுவே, தற்போது சோபிதா துலிபாலா என்ட்ரி கொடுத்துவிட்டார்.

மேலும் சமந்தாவை நாக சைதன்யா தான் கழட்டிவிட்டு விட்டார் என்றும், சமந்தாவின் காதல் உண்மையானது, அது நாக சைதன்யாவுக்கு புரியவில்லை என்றும் ரசிகர்கள் பொங்கி வந்தனர். இந்நிலையில், நாக சைதன்யா இவர்களின் விவாகரத்தில் இருந்து மீண்டு, தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், சமந்தாவை நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயார் என இளைஞர் ஒருவர் செய்த செயல், சமந்தாவையே Impress அடைய வைத்துள்ளது.

தெலுங்கு இன்ஸ்டாகிராம் பிரபலமும், மருத்துவருமான முகேஷ் சிந்தா என்ற இளைஞர், நாக சைதன்யாவுக்கு நிச்சயம் முடிந்ததால், அதே நாளில் பஸ் ஏறி கிளம்பி, சமந்தாவின் வீட்டை தேடி கண்டுபிடித்து , இறுதியில் அவரது வீட்டிற்கு சென்று விடுகிறார். அப்போது சமந்தா எப்போதுமே ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் பகிர்வதை தெரிந்து கொண்டு, அதனால் அவர் அதிக நேரம் ஜிம்மில் தான் இருப்பார், நாம் அங்கு சென்றால் சமந்தாவை பார்த்துவிடலாம் என்று வீட்டிற்குள் நுழைந்த முகேஷ் என்ற இளைஞர், நேராக சமந்தாவின் ஜிம் ஏரியாவுக்கு சென்று விடுகிறார்.

அங்கு சென்ற அவர், சமந்தாவின் முன்பு முட்டிபோட்டு, நான் எப்போதும் உங்களுக்காக இருப்பேன், நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள், உங்களை நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், நாக சைதன்யா போனால் பராவாயில்லை, please marry me என propose செய்கிறார். மேலும் அவர், இன்னும் இரண்டு வருடம் மட்டும் எனக்கு அவகாசம் கொடுங்கள், அதற்குள் நான் நல்ல வேலைக்கு சென்று வருமானரீதியாக முன்னுக்கு வந்து விடுவேன், அதன்பின் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என உறுதியாகக் கூறி தன் காதலை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் தான் இப்படி அச்சு அசலாக சமந்தாவின் வீட்டை தேடி சென்று ப்ரபோஸ் செய்து வீடியோ போட்ட இளைஞரை பார்த்த சமந்தா, அந்த வீடியோவிற்கு பதிலளிக்கும் வகையில், உங்கள் பின்னணியில் இருக்கும் அந்த ஜிம் என்னை கிட்டத்தட்ட சம்மதிக்க வைக்கிறது என பாசிட்டிவ் ரிப்ளை கொடுத்திருந்தார். இதனால் அந்த இளைஞருக்கு சமந்தா No சொல்லவில்லை என்றும், அவரின் ப்ரோபோசலை ஏற்றுக் கொண்டு விட்டார் என ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கின்றனர். மேலும் பலர், சமந்தா விளையாட்டாக ரிப்ளை செய்திருந்தாலும், நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் அவரை பெரிதாக பாதிக்கவில்லை, அவர் தற்போது ஜாலியாகத்தான் இருக்கிறார் என்று மன நிம்மதியும் அடைந்துள்ளனர்.