பல கோடியை தூக்கி எறிந்த சமந்தா… நான் பணத்துக்காக காதலிக்கவில்லை..

0
Follow on Google News

சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த நடிகை சமந்தா 10ம் வகுப்பு, 12ம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரியிலும் சிறந்த மதிப்பெண்ணை பெற்று வெளியே வந்தவர் மிக கடுமையான போராட்டத்தை சந்தித்தார், பல விளம்பர படங்களில் நடித்த சமந்தா பல நேரங்களில் வேலை இன்றி ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதில் ஒரு வேலை மட்டுமே சாப்பிட்ட காலமும் உண்டு.

கிடைக்கும் வேலையை பார்த்து கொண்டு கடினமாக போராடிய சமந்தா தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருந்தார். அப்பொழுது மெட்ராஸ் டாக்கீஸ் மணிரத்தினம் தயாரிப்பில் ஒரு பட வாய்ப்பு கிடைக்கிறது. அந்த படத்தின் போட்டோ சூட் எல்லாம் தொடங்கிய பின்பு சமந்தா இந்த படத்திற்கு சரிப்பட்டு வர மாட்டார் என நிராகரிக்கிறார்கள்.

மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்தும் கடைசி நேரத்தில் இப்படி நழுவி விட்டதே என்று மன வேதனை அடைந்த சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கான முயற்சியை கைவிடவில்லை. ஒரு கட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய சினிமாக்களில் நல்லா வாய்ப்பைக் பெற்று முன்னணி நடிகையாக வந்த சமந்தா, தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் குடும்பமான நாகார்ஜுனாவின் மகன் நாக சைந்தாவை காதலிக்கிறார்.

சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக காதலித்து நாகசைதையாவை திருமணம் செய்து கொண்டார் சமந்தா. சுமார் 400 கோடி சொத்துக்களுக்கு அதிபதியான நாகசந்தையாவே பணத்திற்காக தான் சமந்தா திருமணம் செய்து கொண்டார் என தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பாக பேசியது. இருந்தாலும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை மூன்று வருடங்களில் முடிவுக்கு வந்தது.

இதற்கு காரணம் சமந்தா ஒரு வெப் சீரியஸில் மிக கவர்ச்சியாக நடித்ததாகவும், அதற்கு நாகர்ஜுனா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் நீங்களும் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தானே, இதில் என்ன தவறு இருக்கிறது என சமந்தா விவாதம் செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் நாகசைந்தய்யா சமந்தா இருவருக்கும் விவாகரத்து ஆனது என பரவலாக பேசப்பட்டது.

மேலும் பணத்திற்காக நாகசைந்தய்யாவை திட்டமிட்டு தன்னுடைய காதல் வலையில் விழ வைத்த சமந்தா தற்பொழுது விவாகரத்து செய்து மிகப் பெரிய தொகையை பெறுவதற்கு தயாராகி விட்டார் என தெலுங்கு மீடியாக்கள் சமந்த விவாகரத்து குறித்து பரபரப்பாக செய்திகள் வெளியிட. அது மட்டும் இன்றி சென்னையில் பல்லாவரத்தில் உள்ள சமந்தாவின் வீட்டை வீடியோவாக எடுத்து இப்படி நடுத்தர குடும்பத்தில் வசித்தவர் தான் சமந்தா.

ஒரு மஞ்சப்பையை எடுத்துக் கொண்டுதான் காய்கறி வாங்க கடைக்கு செல்வார், அப்படி ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த சமந்தா நாகசைந்தய்யா திருமணம் செய்தது பணத்திற்காக தான், தற்பொழுது விவாகரத்து செய்து பெரும் கோடி ஜீவனாம்சம் பெறுவார் என்கின்ற ஒரு பரபரப்பாக சமந்தா மீது தெலுங்கு மீடியாக்கள் சமந்தாவை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்தது.

இதனை தொடர்ந்து நாகசைந்தய்யா – சமந்தா விவாகரத்து பெற்று பிரிந்த போது சமந்தா ஜீவனாம்சமா எத்தனை கோடி கேட்க இருக்கிறார் என பலரும் எதிர்பார்த்து இருக்கு, நாகசைந்தய்யா உடன் சமந்தா வாழ்ந்ததற்காக சமந்தாவுக்கு சுமார் 200 கோடி ரூபாய் நாகர்ஜுனா குடும்பத்தினர் கொடுக்க முன் வந்த போதும் நான் பணத்திற்காக நாகசைந்தய்யாவை காதலிக்கவில்லை நான் மனதார காதலித்தேன் உங்கள் பணம் எனக்கு வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு சமந்தா வந்த போது, அதுவரை சமந்தாவை கண்டபடி தூற்றிய தெலுங்கு மீடியாக்கள் தலைகுனிந்து நின்றது. இப்படி 200 கோடியை வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டு வந்த சமந்தா பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.