இரண்டாவது திருமணத்திற்கு தயாரான சமந்தா… மாப்பிள்ளை யார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு நாகசைதையா திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நான்கே ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன்பின்பு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த இருவரும், தற்போது அடுத்த அடுத்த திருமணத்திற்கு தயாராகி இருப்பது பெரும் பேசு பொருளாகியுள்ளது.

முதலில் கடந்த வாரம், நாக சைதன்யா பொன்னியின் செல்வன் பட நடிகையான சோபிதா துலிபாலாவை நிச்சயம் செய்து கொண்டார். இந்த நிச்சயதார்த்த செய்தி தான் கடந்த வாரம் முழுவதுமே திரும்பும் திசை எல்லாம் பேசப்பட்டு வந்தது. ஆனால் இதைத்தொடர்ந்து, நடிகை சமந்தாவும் தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும், அவர் பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரின் விவாகரத்துக்கு காரணமே, சமந்தா, திருமணத்திற்கு பிறகும் படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடிப்பதுதான் என சொல்லப்பட்டது. மேலும் சமந்தா,படங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டாம் என்று சொல்லியும், அதை கேட்காமல், வேண்டும் என்றே, இந்தியில் வெளியான ஃபேமிலி மேன்-2 வெப் சீரிஸில் சமந்தா படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.

இதனால் தான் நாக சைதன்யா, சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டார் என கூறப்பட்டது. ஆனால் மறுபுறம், நாக சைதன்யா, விவாகரத்துக்கு முன்பே, சோபிதா துலிபாலாவை காதலித்து வந்ததாகவும், இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டேட்டிங் செல்வதாகவும் பல புகைப்படங்கள் வெளியானது. இதனால் தான் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் என மற்றொரு தரப்பினரும் கூறி வந்தனர்.

இதனை தொடர்ந்து, நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும், கடந்த வாரம் நிச்சயம் செய்து கொண்ட நிலையில், இவர்களின் திருமண தேதி கூட இன்னும் அறிவிக்கப்படாத சூழலில், நடிகை சமந்தாவும் அடுத்த திருமணத்திற்கு தயாராகி இருப்பது தெரியவந்துள்ளது. முதலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே, நடிகை சமந்தாவுக்கு, இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

வீட்டில் பெரியவர்கள் பார்த்து சமந்தாவிற்கு தூரத்து உறவினர் ஒருவரை பேசி முடித்திருப்பதாகவும், அவருடன் சமந்தாவிற்கு விரைவில் திருமண பேச்சு வார்த்தை தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது நாக சைதன்யா கடந்த வாரம் நிச்சயம் செய்து திருமணத்திற்கு தயாரான நிலையில், தற்போது சமந்தாவும் அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏனெனில் பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் என்பவரை அவர் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சமந்தா முதல் முதலில் நடித்த ஃபேமிலி மேன் 2 வெப்தொடரின் இயக்குனர் தான் இவர். மேலும் தற்போதும் சமந்தா, Citadel: Honey Bunny எனும் மற்றொரு வெப் தொடரில் நடித்துள்ளார். இதன், படப்பிடிப்பின் போது தான், ராஜுடன் சமந்தாவிற்கு காதல் மலர்ந்தாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த பாலிவுட் இயக்குனர் ராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், அதனால் சமந்தா உடனான காதலால் விரைவில் அவர் தன்னுடைய மனைவியை விவாகரத்துத் செய்ய இருப்பதாதகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது, ஃபேமிலி மேன் வெப் தொடரில் நடிகை சமந்தா கவர்ச்சியாக நடித்தது ஒரு பக்கம் சர்ச்சை கிளப்பினாலும், தற்போது அந்த வெப் தொடரின் இயக்குனரை தான் சமந்தா காதலிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் ஃபேமிலி மேன் தொடரில் கவர்ச்சியாக நடித்து தான் குடும்பத்திற்குள் பிரச்சனையே வந்தது, அதே போல் அந்த வெப் தொடரின் இயக்குனரை தான் சமந்தா காதலிப்பதால், இவர்களின் விவாகரத்துக்கு காரணமே ஃபேமிலி மேன் தொடர் தான் என்பதும் தெளிவாகியுள்ளது. இந்த செய்தி தான் தற்போது பாலிவுட் மீடியாக்களில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.