சமந்தாவுக்கு அந்த மாதிரி பிரச்சனை… இதுக்கு தான் நாக சைதன்யா – சமந்தா பிரிந்தார்களா.?

0
Follow on Google News

பொதுவாகவே சினிமா துறையில் நடிகைகள் திருமணம் செய்து கொள்ள யோசிப்பார்கள். ஒருவேளை அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள மறுப்பார்கள். ஏனெனில் குழந்தை பிறந்தால் அழகு குறைந்து விடும், பட வாய்ப்புகள் வராது என பல காரணங்களை முன்வைப்பது வழக்கம் தான். அப்படிதான் இன்று வரை, த்ரிஷா, அனுஷ்கா போன்றவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலும்,

நயன்தாரா போன்றோர் திருமணம் செய்தாலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர். அதாவது தங்களால் குழந்தை பெற்று கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் அழகு போய்விடும் என்பதற்காக சினிமா நடிகைகள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் சினிமா துறையில், சமந்தாவுக்கு மருத்துவ ரீதியான பிரச்சனையால் அவர் விவாகரத்து செல்லும் நிலைக்கு சென்று விட்டது.

முதலில் நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நோய் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களை தாக்கி, தசைகளையும் தாக்கும், மேலும் இது தாங்க முடியாத வலியையும் வீக்கத்தையும் உண்டாக்கும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் தசைகள் மிகவும் வலுவிழந்து போய்விடும், இதனால் நாளடைவில் படுக்கையில் இருந்து கூட எழுந்து செல்வதற்கு முடியாத நிலை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் குறிப்பாக இந்த நோய் மரபணுவால் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சமந்தாவுக்கு இருக்கும் இந்த நோய், அவர் வயிற்றில் வளரும் வாரிசுக்கும் ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருப்பதால், நோய்வாய்ப்பட்ட வாரிசு எங்களுக்கு வேண்டாம் என்று, நாக சைதன்யா குடும்பம், சமந்தாவால் ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றுத் தர முடியாது என அவரை ஓரம் கட்டியிருக்கின்றனர்.

நடிகை சமந்தா ஒரு முறை கர்ப்பம் அடைந்து பின்பு அந்த கருவை கலைத்ததாலும், அவரால் மீண்டும் ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றுத் தர முடியாது என்பதாலும் தான் சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்திருக்கிறார். குறிப்பாக, நடிகர் நாகார்ஜுனா இந்தியாவிலேயே 3வது பெரிய பணக்கார நடிகர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 6000 கோடி சொத்துக்களுடன் முதல் இடத்திலும், 3200 கோடி சொத்துக்களுடன் ஹ்ரித்திக் ரோஷன் 2வது இடத்திலும், 3100 கோடி சொத்துக்களுடன் நாகார்ஜுனா 3வது இடத்திலும் இருக்கிறார்.

இப்படி 3100 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கென தனியாக ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் தந்தை நாகார்ஜுனா வீட்டுக்கு அருகே சொந்த வீடு உள்ளது. மேலும், சொகுசு கார்கள் என ஒட்டுமொத்தமாக 500 கோடி ரூபாய் வரை நாக சைதன்யாவிடம் சொத்துக்கள் இருக்கின்றன.

இப்படி அப்பாவிடம் 3100 கோடி தன்னிடம் 500 கோடி சொத்துக்களை வைத்திருக்கும் நாக சைதன்யா, இந்த சொத்துக்களுக்கு எல்லாம் சொந்தக்காரராக ஒரு வாரிசு வேண்டும் என்று தான், சமந்தாவால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சமந்தாவை உயிருக்கு உயிராக நாக சைதன்யா காதலித்து இருந்தால், சமந்தாவால் ஆரோக்கியமான குழந்தை பெற்று கொள்ள முடியவில்லை என்றாலும் வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்று இருக்கலாம்.

ஆனால் அதற்கு நாக சைதன்யா குடும்பத்தினர் விரும்பவில்லை, இதனை தொடர்ந்து தனக்கு இருக்கும் மருத்துவ பிரச்சனையால் சமந்தாவே முன் வந்து, நாக சைதன்யாவிடம் நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள், நாம் விவாகரத்து செய்து கொள்வோம் என தெரிவித்து விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார் சமந்தா என கூறப்படுகிறது.