நயன்தாராவுக்கு ஆப்பு வைத்த சமந்தா.. சொந்த காசில் சூனியம் வைத்து பரிதாபத்தில் நயன்தாரா..!

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் முதல் நடிகையாக இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா, ஒரு படத்துக்கு சுமார் 6 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நயன்தாரா, அடுத்து புதியதாக தான் நடிக்கும் படத்துக்கு 10 கோடி சம்பளம் கேட்டு வருகிறார், அஜித் நடிக்கும் புதிய படம் ஒன்றில் 10 கோடி வரை சம்பளம் கேட்டு, அதற்கு தருவதாகவும் தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது, மேலும் அடுத்த வரும் புதிய படங்களுக்கு 15 கோடி வரை நயன்தாரா சம்பளம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

சம்பளம் அதிகம் வாங்கும் நயன்தாரா படத்தில் நடிப்பதற்கு முன்பு சில ஒப்பந்தம் போடுகிறார், அதில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க மாட்டேன், மேலும் தன்னுடைய உதவியாளர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் தான் சம்பளம் தரவேண்டும் போன்ற ஒப்பந்தம் போடும் நயன்தாரா, அவருடைய உதவியாளர் மட்டும் சுமார் 15 பேர் வரை படப்பிடிப்புக்கு அழைத்து வந்து, தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் தொகையை செலவு செய்ய வைக்கிறார் என கூறப்படுகிறது.

இதனால் தயாரிப்பார்களின் வயிற்றிச்சலுக்கு உள்ளன நயன்தாரவை, மார்க்கெட் அவருக்கு இருக்கிறது என்பதற்காக வேறு வழியின்றி அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து படத்தில் ஒப்பந்தம் செய்து வந்தனர். இந்நிலையில் நயன்தாராவின் அட்டூழியத்துக்கு முடிவு கட்டும் விதத்தில், நடிகை சமந்தா பெரிய ஆப்பு வைத்துள்ளது தற்பொழுது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பெரும்பாலான தயாரிப்பாளர் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா , சமந்தா நடிப்பில் வெளியான படம் காற்று வாக்கில் இரண்டு காதல், இந்த படத்தில் நயன்தாராவின் தோற்றம் முதிர்கன்னி போல், முகத்தில் டொக்கு விழுந்து வயதானவர் போன்று தோற்றம் அளித்து, படத்தை பார்த்தவர்கள் இனி நயன்தாரா அம்மா கதாபாத்திரத்துக்கு தான் சரி பட்டு வருவார் என்றும், அதே நேரத்தில் சமந்தாவின் அழகில் ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.

மேலும் காற்று வாக்கில் இரண்டு காதல் படத்துக்கு பின்பு நயன்தாரா ரசிகர்கள் பலர் சமந்தாவின் ரசிகர்களாக மாறினார்கள். காற்று வாக்கில் இரண்டு காதல் படத்துடன் நயன்தாராவின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது என கூறப்படுகிறது, மேலும் நயன்தாராவிடம் கால் சீட் கேட்டு வைத்திருந்த தயாரிப்பாளர்கள், அவருக்கு பதில் சமந்தாவிடம் கால் சீட் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்.

சொந்த தயாரிப்பில் படம் எடுத்து , தனக்கு இணையான கதாபாத்திரத்தில் சமந்தாவை நடிக்க வைத்து தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டார் நயன்தாரா என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் காற்று வாக்கில் இரண்டு காதல் படம் நடிகை சமந்தாவுக்கு ரீ- எண்ட்ரியாக அமைத்துள்ளதால், அவருக்கு தற்பொழுது பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

டென்ஷனான அஜித்…  கண்ட நாய்கள் எல்லாம் அட்வைஸ் பண்ணுவதா… என்ன நடந்தது தெரியுமா.?