சமந்தாவை ஏமாற்றிய நாக சைதன்யா… நம்பி மோசம் போன சமந்தா…

0
Follow on Google News

கடந்த இரண்டு தினங்களாகவே சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருப்பது சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் தான். ஏனெனில் சமந்தாவை துரத்தி துரத்தி காதலித்து, 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர், நான்கே வருடங்களில் விவாகரத்து செய்துவிட்டார். மேலும் விவாகரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், மீண்டும் காதலில் விழுந்த நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை, இரண்டாவது திருமணம் செய்வதாக அறிவித்து நிச்சயம் செய்திருக்கிறார்.

இந்நிலையில்தான் சமந்தாவின் குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்து கும்மி அடித்தவர் யார் என்றும், சமந்தாவும் நாத சைத்தன்யாவும் விவாகரத்து செய்ததற்கு முக்கிய காரணமே இவர்தான் என்றும், சமந்தாவின் கூடவே இருக்கும் மேக்கப் ஆர்டிஸ்ட் மற்றும் நெருங்கிய நண்பரான ப்ரீதம் ஜுகல்கர் கூறியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகை சமந்தாவை, நாக சைதன்யா விவாகரத்து செய்ததற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டது. குறிப்பாக, அரைகுறை ஆடையோடு படத்தில் நடித்து குடும்ப கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை என்றும், மேலும் வயிற்றில் வளர்ந்த கருவை சமந்தா கலைத்துவிட்டார், குழந்தை பெற்றுக் கொள்ள மறுக்கிறார் என்றும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்னொரு தரப்பினர், சமந்தா அவரின் ஒப்பனையாளர் ப்ரீதம் ஜுகல்கருடன் உறவில் இருப்பதாக கூறி வதந்திகளை பரப்பினர்.

அதோடு சமந்தா-ஜுகல்கர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, நாக சைதன்யா ரசிகர்கள், ப்ரீதத்தை குறிவைத்து தாக்கி சர்ச்சையை கிளப்பியிருந்தனர். இதற்கு பின்னர், ப்ரீத்தம், சமந்தா எனக்கு அக்கா மாதிரி. நாக சைதன்யாவுக்கும் எங்கள் உறவு எப்படிபட்டது என்பது நன்றாகவே தெரியும். தேவையில்லாமல் என்னை சர்ச்சைக்குள் இழுக்க வேண்டாம் என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.

மேலும் சில பிரபலங்கள், ப்ரீத்தம் மற்றும் சமந்தா காதலிக்க வாய்ப்பே இல்லை என்றும், ப்ரீத்தம் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதோடு சமந்தாவும், ப்ரீதமுடன் தொடர்பு இருப்பதாக வந்த செய்தியை புறக்கணித்து, அவருடன் இன்றுவரை நட்பில் தான் இருக்கிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி, நாக சைதன்யா, சமந்தாவை மேலும் காயப்படுத்தும் விதத்தில், அவரை எப்படி ஆகஸ்ட் 8ஆம் தேதி நிச்சயம் செய்தாரோ, அதேபோல், சோபிதா துலிபாலாவையும் ஆகஸ்ட்-8ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்தார்.

இந்நிலையில் நிச்சயம் முடிந்த கையோடு, ப்ரீதம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தான் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. ப்ரீதம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், வாழ்த்துக்கள், இப்போது அவர் உங்களுடையவர். ரகசியங்களும், பொய்களும் உறவுகளை அழிக்கின்றன. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் மாட்டிக்கொள்வீர்கள் என கோவத்தின் உச்சியில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தான், இந்த கருத்துகள் நாக சைதன்யா மற்றும் சோபிதாவை குறிவைத்து தான் ப்ரீத்தம் மறைமுகமாக சாடியிருக்கிறார் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் வாழ்க்கையில் கும்மியடித்தது சோபிதா தானா என்றும், சமந்தாவை விவாகரத்து செய்யும் முன்னரே நாக சைதன்யா, சோபிதாவுடன் தொடர்பில் இருந்திருக்கிறார் என்றும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரம் சமந்தா வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது கண்டிப்பாக ப்ரீத்தமுக்கு தெரியும். அதனால் தான் அவர் இந்த பதிவை போட்டுள்ளார் என்றும் பலரும் கூறிவருகின்றனர்.