நடிகை சமந்தவா தூக்கி ஜெயில்ல போடுங்க சார்… உயிர் போச்சுன்னா திரும்ப வருமா.?

0
Follow on Google News

நடிகை சமந்தா, கடந்த ஒரு வருடமாகவே, மையோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு, திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார். ஆனால் படங்களில் நடிக்காமல் இருந்தாலும், சோசியல் மீடியாவில் Active-ஆக இருக்கும் இவர், ரசிகர்களுக்காக அவ்வப்போது பல போஸ்ட்களையும் போட்டுக் கொண்டிருப்பார். அப்படித்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நெபுலைசர் கருவியை மூக்கில் வைத்துக்கொண்டு ரசிகர்களுக்கு ஒரு டிரீட்மென்ட் சொல்கிறேன் என போஸ்ட் போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இதனைப் பார்த்த மருத்துவர்கள், ரசிகர்களின் உயிரை சமந்தா எடுக்க பார்க்கிறார், அவரை சிறையில் அடைக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Fitness, diet என பல தகவல்களை பகிரும் சமந்தா, நெபுலைசர் கருவியை தனது மூக்கில் வைத்துக் கொண்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதனுடன் ஒரு பொதுவான வைரசுக்கு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், இந்த மாற்று வழியை முயற்சி செய்து பாருங்கள் என, ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகிய இரண்டையும் கலந்து நெபுலைசர் செய்யலாம் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இதனை பார்த்த லிவர் டாக் என்ற டாக்டர், சமந்தாவின் பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். செல்வாக்கு மிக்க இந்திய நடிகையாக இருக்கும் சமந்தா, துரதிஷ்டவசமாக உடல்நலம் மற்றும் அறிவியல் படிப்பறிவு இல்லாதவர் என்றும், அவர் மில்லியன் கணக்கில் Followers-களை வைத்துக்கொண்டு, சுவாச வைரஸ் தொற்றுகளைத் தடுக்க ஹைட்ரஜன் பெராக்ஸைட் சிகிச்சையை செய்ய சொல்கிறார்.

இந்த சிகிச்சையை அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம் செய்யக்கூடாது என்று கூறியதோடு, இது உயிருக்கே ஆபத்து என்றும் எச்சரித்து இருக்கிறது. ஆனால் ஒன்றுமே தெரியாமல் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இவர் பதிவு போட்டதுக்கு, அபராதமோ அல்லது சிறை தண்டனையோ அளிக்கப்பட வேண்டும் என பொங்கி எழுந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சமந்தா, டாக்டர் லிவர் டாக்-கிற்கு மூன்று பக்க அளவில் பல ஆதாரங்களை அடுக்கி பதிலடி கொடுத்ததோடு, என்னை சிறையில் அடைக்க வேண்டுமா என்றும் பொங்கி எழுந்துள்ளார். அதில் அவர் கடந்த சில ஆண்டுகளாக நான் பலவகையான மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருந்தது, எனக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்தையும் நான் முயற்சி செய்தேன், இந்த பரிந்துரைகள் மிகவும் தகுதி வாய்ந்த நிபுணர்களிடமிருந்து வந்தவை, ஆனால் இந்த சிகிச்சையும் எனக்கு பயனளிக்காமல் இருந்தது.

மேலும் இது மிகவும் விலை உயர்ந்ததாகவும் இருந்தது. என்னால் சகஜமாக இந்த சிகிச்சையை செய்து பார்க்க முடிந்தாலும், இந்த சிகிச்சையைப் பெற முடியாதவர்கள் என்ன செய்வார்கள் என நினைத்து பார்த்தேன், பிறகு பல சோதனைகளுக்குப் பிறகு எனக்கு பிரமாதமாக வேலை செய்யும் ஒரு சிகிச்சையை கண்டறிந்தேன். அதைத்தான் மற்றவர்களுக்கு பயனளிக்க முடிந்தால் பயனளிக்கும் என்று இதை நான் கூறினேன்,

ஆனால் ஒரு ஜென்டில்மேன் டாக்டர் என்னை கடுமையாக விமர்சித்திருக்கிறார், அவருக்கு என்னை விட அதிகம் தெரிந்து இருக்கலாம், இருப்பினும் அவர் தனது வார்த்தைகளால் என்னை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டார். குறிப்பாக என்னை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார், நான் பிரபலமான நடிகையாய் இருப்பதால் என் மீது அவருக்கு வண்ணம் இருக்கிறது போல என்றும், இந்த விஷயத்தை நான் நேரடியாக டீல் செய்வதை விட, எனது மருத்துவ குழு அவருடன் விவாதம் செய்து டீல் செய்யும் என்றும் அந்த டாக்டருக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.