இதெல்லாம் இவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா.? கொந்தளித்த நடிகை சாய் பல்லவி…

0
Follow on Google News

தென்னிந்திய சினிமா உலகில் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்டவர். இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

பின் 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய் பல்லவி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் கூப்பிடுகிறார்கள். பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

மாரி இரண்டாம் பாகத்தில் தனுஷுடன் ஜோடி போட்டார். அதில் நடிப்பை விட அவருடன் மை டியர் மச்சான் பாடலுக்கு போட்ட ஆட்டத்திலேயே பலருக்கும் நெஞ்சு வலி வராத குறை தான். இந்த படத்தினை தொடர்ந்தே சாய் பல்லவிக்கு தமிழில் அங்கீகாரம் கிடைத்தது. சூர்யாவுடன் என்.ஜி.கே, அவர் தனியாக நடித்த கார்கி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் கோலிவுட்டில் சாய் பல்லவிக்கு கிடைக்கவில்லை.

ஆனால் அதே நேரத்தில் தெலுங்கில் லவ் ஸ்டோரி, விரட்ட பர்வம், ஸ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் நாக சைதன்யாவின் 23வது படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. இதுபோக இந்தியில் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நடிக்கும் ஒரு பெயரிடாத படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயனின் 21 வது படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் எடுக்க பட்ட புகைப்படம் தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சில தினங்களாகவே சாய்பல்லவிக்கு திருமணமாகிவிட்டது என்று வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது இதற்கு பதில் அளிக்கும் வகையில். நடிகை சாய் பல்லவி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அதன் அதற்கு விளக்கத்தை அளித்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் சாய் பல்லவிக்கு அருகில் இருப்பது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. அவர் கழுத்திலும் சாய் பல்லவி கழுத்திலும் மாலை அணிவித்ததால் சிலர் அதனை திருமணம் என்று வதந்தி பரப்பி வந்தனர் ஆனால் அது எஸ்கே 21 திரைப்படத்தின் பூஜை. இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “ நான் வதந்திகளை கண்டுகொள்வது இல்லை அதை பற்றி கவலைப்படுவதும் இல்லை.

ஆனால் அந்த வதந்தி குடும்ப நண்பர்களை உள்ளடக்கி இருந்தால் கண்டிப்பாக அதை பற்றி நான் பேசியாக வேண்டும். என் படப்பிடிப்பு பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வேண்டுமென்றே எடிட் செய்து பணதிற்காக கேவலமான நோக்கத்துடன் பரப்பி வருகின்றனர். என் அடுத்தடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான தகவல்களை வெளியிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது இதுபோன்ற அர்த்தமற்ற செயல்களுக்கு விளக்கமளிப்பது வேதனையாகவுள்ளது” என்று பதிவிட்டிருக்கிறார். அவரது இந்த ஆவேச பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.