ராதாவை கைக்குள் வைத்திருந்த சிரஞ்சீவி… ஓ… இதுக்கு தான் ராதா மகள் திருமணத்தை விழுந்து விழுந்து கவனித்தாரா சிரஞ்சீவி..

0
Follow on Google News

தமிழ் திரையுலகில், விண்டேஜ் ஹீரோயின்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் ராதா. தமிழ் மொழி மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தார். இவருக்கு கார்த்திகா மற்றும் துளசி என இரண்டு மகள்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இவரின் மூத்த மகள் கார்த்திகாவிற்கு திருமணம் ஆனது.

கடந்த 19ஆம் தேதி, கார்த்திகாவிற்கு கேரளாவில் உள்ள திருவணந்தபுரத்தில் திருமணம் நடந்தது.கார்த்திகா-ரோகித் ஆகியோர் அணிந்திருந்த ஆடைகள், நகைகள் என அனைத்துமே விலை உயர்ந்தவை என கூறப்படுகிறது. பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமண விழாவில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ஜாக்கி ஷெராப், பாக்யராஜ் மற்றும் நடிகைகள் ராதிகா, சுஹாசினி, ரேவதி, பூர்ணிமா, கௌசல்யா ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிலையில், நடிகை ராதா தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் போது பெரிய தொகையை வரதட்சனையாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. நடிகை ராதா, நடித்து கொண்டிருந்த காலத்திலேயே ஹோட்டல் வணிகத்தில் பணத்தை முதலீடு செய்து, தொழிலதிபராக மாறினாராம். இவரது குடும்பமே தற்போது இந்த தொழிலில்தான் இருக்கின்றனராம்.

கார்த்திகாவின் திருமணத்திற்காக ராதா 500 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, கார்த்திகாவின் கணவர் ரோகித்தும் மிகப்பெரிய தாெழிலதிபர் என்றும் அவருக்கும் பல கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ராதா மற்றும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பற்றி பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சில தகவல்களை தெரிவித்திருக்கிறார்.

அவரை கூறியதாவது, “அம்பிகாதான் ராதாவை தெலுங்கு இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தி வாய்ப்புகள் வாங்கிக்கொடுத்தார். அங்கு நடிக்க ஆரம்பித்த ஒருகட்டத்தில் அம்பிகாவையே ஓவர் டேக் செய்துவிட்டார் ராதா. அதை பார்த்து அம்பிகா சந்தோஷம்தான் அடைந்தார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் தொடர்ந்து நடித்துவந்தார் ராதா. இதை கவனித்துக்கொண்டிருந்த பாலகிருஷ்ணா ஏன் சிரஞ்சீவியுடன் மட்டும்தான் ராதா நடிப்பாரா என கேட்டுவிட்டு அவருடன் நடிக்க மல்லுக்கட்ட ஆரம்பித்தார்.

தொடர்ந்து மல்லுக்கட்டி ஒருவழியாக தனக்கு ஜோடியாக ராதாவை நடிக்க வைத்தார். இருந்தாலும் அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. பாலகிருஷ்ணாவுடன் ராதா நடித்தாலும் அவரை சிரஞ்சீவி தனது கைகளுக்குள்ளேயே வைத்திருந்தார். ராதா விஷயத்தில் தெலுங்கு நடிகர் பாலையாவுக்கும், சிரஞ்சீவிக்கும் மிகப்பெரிய தகராறு எல்லாம் வந்ததுண்டு. அதனால்தான் ராதாவின் மகள் திருமணத்துக்கு மூன்று நாட்கள் முன்னரே வந்து விழுந்து விழுந்து வேலை செய்தார் சிரஞ்சீவி. எப்பவுமே படம் ஓடலைன்னா அந்த நடிகையை சீண்ட மாட்டாங்க. அதனால கார்த்திகாவுக்கு கல்யாணம் பண்ணனும்கற முடிவுக்கு வந்தார் ராதா.

கார்த்திகா திருமணத்தில் அப்பா ஸ்தானத்தில் இருந்து மகளுக்கு செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் செய்தார் சிரஞ்சீவி. காரணம் தன்னுடைய பல படங்களில் நடித்த காரணத்தால் அவருக்கு நட்பின் அடிப்படையில் இந்தப் பணிவிடைகளைச் செய்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரஜினி, கமலுடன் ஜோடியாக நடித்தவர் ராதா. ஆனால் அவர்கள் யாரும் திருமணத்திற்குச் செல்லவில்லை.” என்று கூறியுள்ளார்.