கவுண்டமணி – ரம்பா இடையில் 30 வருசத்துக்கு முன்னால்… அட.. கவுண்டமணியும் அதற்கு சலித்தவர் இல்லை போல..

0
Follow on Google News

90s-களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ரம்பா, உழவன் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமாகி, உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் பிரபலமானார். அப்போது நடிகை சிம்ரனை எப்படி இடுப்பழகி என்று சொல்வார்களோ, அதே போல் தான் நடிகை ரம்பாவை தொடை அழகி என்று ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அதன்பிறகு பல படங்களில் நடித்து, இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், திரையுலகின் உச்சத்தில் இருந்த போதே திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிவிட்டார்.

அதன் பிறகு, குடும்பம், குழந்தைகள் என இருந்த ரம்பா, தற்போது தான் மீண்டும் கேமரா முன்பு தலைகாட்ட ஆரம்பித்து இருக்கிறார். இந்நிலையில் தான் நடிகை ரம்பாவுக்கு 90ஸ் காலகட்டத்திலேயே, கவுண்டமணி ஒரு வீட்டை பரிசாக கொடுத்திருக்கிறார். ஆனால் தற்போது அவர் அந்த வீட்டை திருப்பி கேட்க, எனக்கு தான் அந்த வீடு வேண்டும் என இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரம்பா மற்றும் கவுண்டமணி ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக உள்ளத்தை அள்ளித்தா, தர்மசக்கரம், மின்சார கண்ணா, ஆனந்தம் என அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் இது ஒருபுறம் இருக்க, நடிகர் கவுண்டமணி, ரம்பாவிற்கு அன்பு பரிசாக, 90ஸ் காலகட்டத்தில் ஒரு வீடு ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார்.

ஆனால் இப்போது அந்த வீடு எனக்கு வேண்டும், அதை திருப்பிக் கொடுத்து விடுங்கள் என ரம்பாவிடம் மல்லுக்கட்டி நிற்கிறார். இதனை கேள்விப்பட்ட பலரும், யாராக இருந்தாலும் இப்படி வீட்டையெல்லாம் பரிசாக வழங்க மாட்டார்கள். அப்போது 90ஸ் காலகட்டத்திலேயே, ரம்பாவும், கவுண்டமணியும் நெருக்கமாக பழகி வந்திருக்கலாம், அதன் அடிப்படையில் இவர் ரம்பாவிற்கு வீட்டை பரிசாக அளித்திருப்பார் என்றும் பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் தான் தற்போது, இந்த வீடு விவகாரம் பூதாகரமாக வெடித்து இருக்கிறது. அதாவது கவுண்டமணி ரம்பாவுக்கு அந்த வீட்டை வழங்கும்போது அதன் விலை மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. ஆனால் இன்று கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வீட்டின் விலை பல கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக தான் கவுண்டமணி, நான் பரிசாக அளித்த அந்த வீட்டை திருப்பிக் கொடுங்கள் என ரம்பாவிடம் கேட்க, ரம்பா பரிசாக கொடுத்தது, கொடுத்தது தான், யாராவது பரிசு பொருளை கொடுத்துவிட்டு அதை மீண்டும் வந்து கேட்பார்களா என தர மறுத்திருக்கிறார்.

மேலும் கவுண்டமணி குடும்பத்தினரும் எப்படியாவது அந்த வீட்டை வாங்கி விட வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பணம் செலவு செய்து, எப்படியாவது அந்த வீட்டை மீட்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் சினிமாவில் உச்ச நடிகை மற்றும் நடிகராக இருந்தாலும், பணம் காசு கோடிக்கணக்கில் வைத்திருந்தாலும், பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பதற்கேற்ப தான், இவர்கள் இருவரும் சண்டை போட்டு வருகின்றனர்.

ஒரு வீட்டின் விலை முதலில் குறைவாக இருந்ததால் கவுண்டமணியும் அது தான் எதற்கும் உபயோகமில்லையே என கொடுக்க, தற்போது அதன் விலை உயர்ந்ததும் அதனை திருப்பி கேட்கிறார். நடிகை ரம்பாவும், சரி, அது அவர் கொடுத்தது தானே, திருப்பி கொடுத்து விடலாம் என்று நினைக்காமல், அவரும் அதன் விலையை தெரிந்து கொண்டு தர மறுக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், கொடுத்ததை திருப்பி கேட்கும் கவுண்டமணி மீதும் தவறு இருக்கிறது, அதை போல் அவர் கொடுத்ததை தர மறுக்கும் ரம்பா மீதும் தவறி இருக்கிறது. பணம் என்றால் யார் தான் விட்டுக் கொடுப்பார்கள், இதில் நடிகர், நடிகைகள் மட்டும் என்ன விதி விலக்கா என்றும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தான் கோர்ட் படி ஏறிய இருவரில் யாருக்கு வீடு கிடைக்கும் என்பதை தீர்ப்பு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.