பயில்வானை மட்டையால் ராதிகா அடித்த விவகாரம்… போலீஸ் புகார் குறித்து பயில்வான் என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமாவில் நடைபெறும் கிசு கிசுக்கள் பற்றி பேசி பெரும் சர்ச்சையில் அவ்வப்போது சிக்கி வருகின்றவர். தனக்கு எதிராக கடும் விமர்சனம் வந்தால் கூட, அதை பெரிதாக பொருட்படுத்தாமல், நான் தவறாக எதாவது பேசியிருந்தால் என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என்று துணிச்சலுடன் பதிலளித்துவிட்டு கடந்து சென்றுவிடுவார் பயில்வான் ரங்கநாதன். ஆனால் தொடர்ந்து பேசி வரும் கிசு கிசு தகவல்களை அவர் நிறுத்துவது கிடையாது.

நடிகை கஸ்தூரி மற்றும் ராதிகா குறித்து பயில்வான் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது, நடிகை கஸ்தூரி மிஸ் மெட்ராஸ் பட்டம் வாங்கியது அட்ஜெஸ்ட் செய்து தான் என பயில்வான் பேசியதற்கு கடுமையான எதிப்பை தெரிவித்த கஸ்தூரி, இனி இவர் பெயரை பயில்வான் என்று அழைப்பதற்கு பதில் பன்றி என்று அழைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார், மேலும் நடிகை ராதிகா தாய் குறித்து பயில்வான் பேசியது மிக பெரிய பூகம்பகமாக வெடித்தது.

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் காலை 6 மணியளவில் பயில்வான் ரங்கநாதன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, எதிரில் வந்த ராதிகா, என்னுடைய தாயை எப்படி நீ தவறாக பேசலாம், என் தாய் ஒழுக்கம் இல்லாதவர் என்று நீ எப்படி பேசலாம் என அங்கே சத்தமிட்டு சண்டையிட்டுள்ளார். இதற்கு பயில்வான் நான் பொய் பேசவில்லை எனக்கு வந்த தகவலை தான் வெளியில் சொன்னேன் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

ஆனால், நடிகை ராதிகா விடுவதாக இல்லை, அசிங்கமாக கேட்ட வார்த்தையில் பயில்வான் ரங்கநாதனை திட்டியுள்ளார் ராதிகா, அங்கே இருந்தவர்கள் இவர்கள் சண்டையிடுவதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து வந்துள்ளனர், ஒரு கட்டத்தில் செம்ம டென்ஷனான பயில்வான், நான் பேசியது தவறு என்றால் என் மீது வழக்கு பதிவு செய், சும்மா.. என்னிடம் கூச்சல் போட வேண்டாம் என பதிலுக்கு பயில்வான் பேச உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார் ராதிகா.

இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் குறித்து பயில்வான் பேசியதுக்கு பதிலடி தரும் விதத்தில் சினிமா படத்தில் ஆடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கே.ராஜன் மிக கடுமையாக பயில்வான் ரங்கநாதனை ஒருமையில் பேசியிருந்தார், மேலும் பயில்வான் மீது கே.ராஜன் போலீஸ் புகார் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தன் மீது கே.ராஜன் கொடுக்கப்பட்ட போலீஸ் புகார் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், புகார்கள் அனைத்தும் பொய் என்றும்.

மேலும் தன் மீது கொடுக்கப்பட்ட புகாரில் ராதிகா என்னை மட்டையால் அடித்ததாக கே.ராஜன் தெரிவித்துள்ளார், அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. மேலும் பெஷன் நகர் பீச்சில் ராதிகா என்னை மட்டையால் அடித்ததாக கே.ராஜன் தெரிவித்துள்ளார். ராதிகா என்னிடம் சண்டையிட்டது திருவான்மியூர் கடற்கரையில் தான், அவர் சண்டையிட்ட போது நான் பதிலுக்கு சண்டை போடவும் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார் என தெரிவித்த பயில்வான்.

தன்னை ராதிகா அடித்ததாக கூறப்படுவது பொய் என்றும், மேலும் நடிகை கஸ்தூரி பன்றி என்று திட்டியதாக கே.ராஜன் தெரிவித்துள்ளார், கஸ்தூரி அப்படி என்னை திட்டியது கிடையாது, என் மீது தவறு இருந்தால் நடிகர் சங்கத்தில் புகார் தெரிவிக்கலாம், நான் சினிமாவில் நடக்கும் தவறுகளை தொடர்ந்து பேசி கொண்டே தான் இருப்பேன் என தெரிவித்த பயில்வான் ரங்கநாதன், சினிமாவில் நிறைய களைகள் எடுக்க வேண்டியிருக்கு என தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அதிரடி… சினிமாவில் இனி நடிப்பதில்லை … தீடிர் அமெரிக்க பயணம்..! என்ன காரணம் தெரியுமா.?