அந்த வீடியோ வெளியானது எப்படி… நடிகை ஓவியா சொன்ன பரபரப்பு… வசமாக சிக்கிய ஓவியா ஆண் நண்பர்..

0
Follow on Google News

நடிகை ஓவியா குறித்து 17 செகண்ட் வீடியோ வெளியாகி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது ஓவியா ஆண் நண்பர் தாரிக் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வீடியோவில் இருப்பது ஓவியா தான் என்பது உண்மையா.? இந்த வீடியோ எப்படி வெளியானது.? யார் வெளியிட்டது என்கிற விவாதம் ஒரு பக்கம் அனல் பறந்து கொண்டிருந்தது. மறு பக்கம் இந்த வீடியோவை பார்க்காதவர்கள் பலர் சமூக வலைதளத்தில் லிக்ங் கொடுங்கப்பா நாங்க இன்னும் பார்க்கல என தவியாய் தவித்து வந்தனர்.

நடிகை ஓவியா எப்பபோதும் ஒளிவு மறைவு இன்றி பேச கூடியவர், அவருடைய இயல்பான குணம் தான் அவருக்கென பல ரசிகர்களை உருவாக்கியது, அந்த வகையில் நடிகை ஓவியா வீடியோ குறித்து அவருடைய சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்த நபர் ஒருவர், ஓவியாவின் 17 வினாடி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது எனக் குறிப்பிட்டிருப்பார். இதைக் கண்ட ஓவியா, அவரிடம் என்ஜாய் என பதில் அளித்து, மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பின், வேறொருவர் வெளியான வீடியோவின் நீளம் மிகவும் குறைவாக உள்ளது. அதிக நேரம் உள்ள வீடியோ கிடைக்குமா என கேள்வி எழுப்பி இருந்தார். அதைக் கண்டு கோபமடைந்து ஓவியா பதிலளிப்பார் என எதிர்பார்த்தால், அடுத்த முறை ப்ரோ என கூலாக பதிலளித்து இருந்தார் ஓவியா, இது பலருக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. அதாவது வெளியான வீடியோவில் இருந்தது நான் இல்லை என்று ஓவியா மறுத்து இருக்கலாம்.

ஆனால் கேள்வி கேட்டவர்களிடம் என்ஜாய், அடுத்த தடவை என ஓவியா பதில் அளித்தது, ஒரு வேலை அந்த வீடியோவில் இருப்பது ஓவியா தானா என்கிற சந்தேகம் பலருக்கு வலுத்து வந்தது. இந்நிலையில் சம்பந்த பட்ட அந்த வீடியோவை நீக்க கோரி திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோவுக்கு நடிகை ஓவியா இமெயில் மூலம் ஒரு புகார் கொடுத்துள்ளார், அந்த புகாரில் எக்ஸ் மற்றும் சில ஆபாச இணையதளங்களில் தனது பெயரில் பரப்பப்பட்டு வரும் வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் ஓவியா.

அதைத்தொடர்ந்து இந்த வீடியோக்களை நீக்க வேண்டும் என்று கூறி எக்ஸ் இணையதளத்திற்கு திருச்சூர் கமிஷனர் இளங்கோ கடிதம் அனுப்பியதை தொடர்ந்து 3 வீடியோக்கள் எக்ஸ் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோ கூறுகையில், எக்ஸ் மற்றும் சில இணையதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஓவியா இமெயில் மூலம் புகார் அனுப்பியதாகவும்.

இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் நடிகை ஓவியாவிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளோம் என தெரிவித்த திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோ, ஓவியாவிடம் விசாரணை நடத்திய பிறகே வழக்கு பதிவு செய்வதா, வேண்டாமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்தவர், மேலும் இதற்கிடையே தாரிக் என்ற நண்பருடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும்,

அவருடைய நட்பை துண்டித்ததால், அவர் தான் ஆபாச வீடியோவை வெளியிட்டிருக்கலாம் என்றும் நடிகை ஓவியா தெரிவித்ததாகவும் . தாரிக்கிடம் மேலும் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும் ஓவியா தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார் என கூறப்டுகிறது. இந்நிலையில் நடிகை ஓவியா தாரிக் என்ற நபருடன் நட்பில் இருந்ததாகவும், பின் அவரின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவரிடமிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த தாரிக் மார்பிங் செய்த வீடியோ ஒன்றை நடிகை ஓவியாவுடன் தொடர்புபடுத்தி வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், தாரிக்கிடம் பல பெண்களின் வீடியோக்களும், மார்பிங் புகைப்படங்களும் உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்பொழுது இந்த விவாகரம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here