நடிகை நிவேதா பெத்துராஜ்க்கு 50 கோடியில் பிரமாண்ட வீடு… உதயநிதி வாங்கி கொடுத்தாரா.? பதில் கொடுத்த நிவேதா பெத்துராஜ்..

0
Follow on Google News

பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து பேசிய பேச்சு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதியின் ரசிகையாக நடிகை நிவேதா பெத்துராஜ்க்கு துபாயில் பெரும் கோடிஸ்வரர்கள் வாழ கூடிய பகுதியில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பில் 2000 சதுர அடியில் மிக பெரிய பங்களா ஒன்றை வாங்கி கொடுத்துள்ளதாக பகீர் தகவலை கிளப்பிய சவுக்கு சங்கர்.

மேலும் நிவேதா பெத்துராஜ் மாதம் இரண்டு முறை தமிழகம் வரும் போது, பேட் மிட்டன், கார் ரேஸ் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க்கு நிகழ்வை இவர் பெரிய வீராங்கனை போன்று செய்தியாக பத்திரிகையாளர் குணசேகரன் வெளியிட்டு, அமைச்சர் உதயநிதியிடம் நற்பெயர் வாங்க முயற்சிப்பதாக சவுக்கு சங்கர் பேசிய இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக என்னை பற்றி தவறான பொய் செய்தி ஒன்று பரவி வருகிறது, இது போன்ற பொய் செய்திகளுக்கு பதில் அளிக்காமல் நான் அமைதியாக இருந்ததற்கு இந்த விவகாரம் குறித்து பேசுக்கின்றவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க நினைப்பதற்கு முன் பூ அந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி ஆராய்வார்கள் என்று நினைந்தேன் என தெரிவித்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ்.

மேலும், இது போன்ற பொய்யான செய்தியால், கடந்த சில நாட்களாக நான் மற்றும் என்னுடைய குடும்பத்தினர் கடுமையாக மனவேதனை அடைந்து வருகிறோம். தவறான செய்தியை பரப்பும் முன்பு தயவு செய்து கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள் நான். 20 வருடங்களுக்கு மேலாக என்னுடைய குடும்பம் துபாயில் தான் இருந்து வருகிறோம், தற்பொழுதும் நாங்கள் துபாயில் தான் வசித்து வருகிறோம்.

சினிமா துறையில், இதுவறை நான் எந்த இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ என யாரிடமும் பட வாய்ப்புகள் கேட்டதில்லை, இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன், அந்த வாய்ப்புகள் அனைத்தும் என்ன கண்டுபிடித்து கொடுக்கப்பட்ட வாய்ப்பு தான் என தெரிவித்த நிவேதா பெத்துராஜ். மேலும் பணத்திற்காக நான் எப்போது பேராசை பட்டதில்லை.இதுவரை என்னை பற்றி பேசும் தகவல் எதுவும் உண்மை இல்லை.

கடந்த 2002ம் ஆண்டு முதல் துபாயில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம் என என தெரிவித்த நடிகை நிவேதா பெத்துராஜ். நான் மிகவும் சாதரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை போலவே வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை சந்தித்து, இறுதியாக நான் மனரீதியாகவும், எமோஷனலாகவும் நல்ல இடத்தில் இருக்கிறேன் என தெரிவித்துள்ள நிவேதா பெத்துராஜ்.

ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் முன், நீங்கள் பெறும் தகவல்களைச் சரிபார்த்து, எங்கள் குடும்பத்தை இனி எந்தக் காயங்களுக்கும் ஆளாக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என தன்னை பற்றி ஆதரமில்லமால் வெளியான தகவலுக்கு வேதனையுடன் விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து தவறான தகவலை சவுக்கு சங்கர் வெளியிட்டது உண்மையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.