நிவேதா பெத்து ராஜ் குறித்து நான் சொன்னது அத்தனையும் உண்மை… என்னிடம் ஆதாரம் உள்ளது… சவுக்கு சங்கர். ..

0
Follow on Google News

நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து சவுக்கு சங்கர் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்றில். தன் மீது அதிக பொசசிவ் ஆக இருக்கும் ஒரு ரசிகைக்காக உதயநிதி ஸ்டாலின் துபாயில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சின்ன வீட்டை வாங்கி தந்திருக்கிறார். இது யாருக்காவது தெரியுமா? இந்தியாவில் வாங்காமல் அவர் துபாயில் வாங்கியதற்கு காரணம் அவர் உதயநிதி மேல் ரொம்ப பொசசிவ் ஆக இருக்கிறார்.

இதனால் இந்தியாவிலேயே அவர் இருக்க கூடாது என்று தான் துபாயில் அவருக்கு வீடு வாங்கி அங்கே வைத்திருக்கிறார். தமிழகத்திற்கு மாதம் இரண்டு முறை மட்டும் வருவார். வரும்போது மட்டும் உதயநிதியை சந்தித்து பேசுவார். அவர் பெயர் நிவேதா பெத்துராஜ். அவர் பேட்மிட்டன் கூட விளையாடுவார்’ என சவுக்கு சங்கர் நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து பேசிய பேச்சு மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இதனை தொடர்ந்து இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகை நிவேதா பெத்துராஜ், விளக்கம் கொடுக்கும் வகையில், ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க நினைப்பதற்கு முன் பூ அந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி ஆராய்வார்கள் என்று நினைந்தேன் என தெரிவித்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ் மேலும், இது போன்ற பொய்யான  செய்தியால், கடந்த சில நாட்களாக நான் மற்றும் என்னுடைய குடும்பத்தினர் கடுமையாக மனவேதனை அடைந்து வருகிறோம்.

தவறான செய்தியை பரப்பும் முன்பு  தயவு செய்து கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள் நான். 20 வருடங்களுக்கு மேலாக என்னுடைய குடும்பம் துபாயில் தான் இருந்து வருகிறோம், தற்பொழுதும் நாங்கள் துபாயில் தான் வசித்து வருகிறோம். மேலும் பணத்திற்காக நான் எப்போது பேராசை பட்டதில்லை.

இதுவரை என்னை பற்றி பேசும் தகவல் எதுவும் உண்மை இல்லை.கடந்த 2002ம் ஆண்டு முதல் துபாயில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம் என என தெரிவித்த நடிகை நிவேதா பெத்துராஜ். நான் மிகவும் சாதரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை போலவே வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை சந்தித்து,

ஒருவரின்  நற்பெயரைக் கெடுக்கும் முன், நீங்கள் பெறும் தகவல்களைச் சரிபார்த்து, எங்கள் குடும்பத்தை இனி எந்தக் காயங்களுக்கும் ஆளாக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என தன்னை பற்றி ஆதரமில்லமால் வெளியான தகவலுக்கு வேதனையுடன் விளக்கம் கொடுத்து இருந்தார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

நிவேதா பெத்துராஜ் இப்படி மன வேதனையுடன் கொடுத்த விளக்கத்திற்கு பின்பு, இதற்கு முன்பு நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய போது அவருக்கு எதிராக மிக கடுமையாக நடவடிக்கை எடுக்க எப்படி நீதிமன்றம் வரை அந்த விவகாரம் சென்றதோ, அதே போன்று நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சவுக்கு சங்கரை நீதிமன்ற கூண்டில் நிறுத்த வேண்டும் என பலரும் நிவேதா பெத்துராஜ் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் சவுக்கு சங்கரிடம் நிவேதா பெத்துராஜ் கொடுத்த விளக்கம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு சவுக்கு சங்கர் நான் நிவேதா பெத்துராஜை பற்றி சொன்னது அத்தனையும் உண்மை. என்னிடம் ஆதாரம் கூட இருக்கிறது. நான் சொன்னது குறித்து அவர் என் மீது கேஸ் கொடுக்கட்டும். நான் கோர்ட்டில் இந்த வழக்கை பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்து மீண்டும் நிவேதா பெத்துராஜ் விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.