தீவிர சிகிச்சையில் நிஷா மகள்… வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய ஓடோடி வந்த அறந்தாங்கி நிஷா…

0
Follow on Google News

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் ஒட்டுமொத்த சென்னையும் சீர்குலைந்து விட்டது என்று சொல்லும் அளவுக்கு, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இந்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் மின்சாரம் வசதி இல்லாமல், அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 6000க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டனர். பெரும்பாலான பகுதிகளில் இன்னும் மழை நீர் வடியாததால் பலர் பசி பட்டினியோடு அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி சூழல் ஏற்ப்பட்டது, கடைகளிலும் பெட்ரோல் நிலையங்களிலும் கூட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் உச்ச நட்சதிரங்களான, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, நடிகைகள் நயன்தாரா, திரிஷா என யாருமே களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்ய வரவில்லை, விஜய் டிவீட்டரில் ஒரு பதிவை போட்டுவிட்டு வழக்கம் போல் அவருடைய ரசிகர்களை உதவி செய்யுங்கள் என உசுப்பேத்தி விட்டுவிட்டு அவர் கம்முனு சும்மா ஜம்முன்னு வீட்டை விட்டு வெளியேற வில்லை.

விஜய் ரசிகர்களும் விஜய் புகைப்படத்தை வைத்து நாங்க தான் உங்களுக்கு சோறு போடுகிறோம் என செய்யும் உதவியை விளம்பரம் செய்ய, இதற்கு விஜய் மாதிரி அவருடைய ரசிகர்களும் வீட்டிலே இருந்திருக்கலாம் என கடும் விமார்சனம் எழுந்தது. இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு மல்லுக்கட்டும் ரஜினி – விஜய் யாரையும் களத்தில் பார்க்க முடியவில்லை, சரி லேடி சூப்பர் ஸ்டார் என படத்திற்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நயன்தாரா, சென்னை வெள்ளத்தில் மக்கள் படும் கஷ்டத்தை தன்னுடைய தொழில் விளமபரத்துக்கு பயன்படுத்தி கொண்ட சம்பவம் பெரும் வேதனையாக இருந்தது.

நடிகை நயன்தாரா தனது ‘பெமி 9’ நிறுவனத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வழங்கினார், ஆனால் அந்த நிவாரண பொருட்கள் ‘பெமி 9’ நிறுவனத்தின் விளம்பர பலகைகள் இடம்பெற்றிருந்த பிரத்தியேக வாகனத்தில் வைத்து தன்னுடைய பெமி 9 நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் செயலில் நயன்தார ஈடுபட்டதாக கடும் விமர்சனம் எழுந்தது.

இப்படி கோடி கோடியாக சம்பளம் வாங்கும் உச்ச நச்சத்திரங்கள் யாரும் சென்னை வெள்ளத்தில் நம்ம தப்பித்தால் போதும் என பாதுக்காப்பாக வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க, விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா ஆயிரம் மக்களுக்கு சாப்பாடு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை பொருட்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இப்படி மக்களுக்கு உதவிசெய்து வரும் நிஷாவின் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சிறு வயதிலேயே அறந்தாங்கி நிஷா மகள் ஒரு விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு ரத்தம் வந்து சிகிச்சை பெற்றுள்ளார்.இந்த நிலையில் சென்னை வெள்ளத்தின் போது மீண்டும் நிஷா மகள் ICUவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் இப்படி மகள் ICU வில் சிகிச்சை பெற்று வரும் சூழலிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிஷா உதவி செய்து வருவது, இவர் தான் உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் என பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.