அஜித்துக்கு நயன்தாரா விடுத்த சாபம்… அடி மேல் அடிவாங்கும் அஜித்…

0
Follow on Google News

நடிகர் அஜித் துணிவு என்கின்ற ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த அஜித், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருந்த நிலையில், அந்த படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில தினங்களில் இருந்த நிலையில் திடீரென்று விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டார் அஜித். இதற்கு விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடிக்கவில்லை என அஜித் சொன்னது தான் என தகவல் வெளியானது.

மேலும் நயன்தாரா எவ்வளவோ அஜித்திடம் பேசியும் விக்னேஷ் இவனுக்கு கொடுத்த வாய்ப்பை தட்டி பிடிங்கி விட்டார் நடிகர் அஜித். இதனால் விக்னேஷ் சிவன் சினிமா கேரியரே முடிவுக்கு வந்து விட்டது என்றே சொல்லும் அளவுக்கு விக்னேஷ் சிவன் மீண்டும் பட வாய்ப்பு இல்லாமல் இன்று வரை தவித்து வருகிறார். இதனால் மனதளவில் மிக பெரிய வேதனையில் நயன்தாரா இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் பதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அடுத்து விடாமுயற்சி படத்தில் கமிட்டான நடிகர் அஜித், அந்த படம் தொடங்கியது முதலே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தது, பொதுவாகவே அரபு நாடுகளில் வெப்ப தாக்கம் அதிகமாக இருக்கும், அதிக காற்று வீசினால் அந்தப் பாலைவனத்தில் மணல் காற்று வீசப்படும், கடும் குளிர் காரணமாக பணி விழுவதெல்லாம் மிக மிகக் குறைவு.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தை முதலில் சார்ஜாவில் எடுத்து முடித்துவிட்டு சில காட்சிகளை சென்னையில் எடுக்கலாம் என்றுதான் ஆரம்பத்தில் முடிவு செய்துள்ளார்கள். ஆனால் திடீரென அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த தொடன்கினார்கள் பட குழு. அஜித்தின் நேரமோ என்னமோ தெரியவில்லை விடாமுயற்ச்சி படம் தொடங்கியது முதலே இயற்கை அந்த பட குழுவிற்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை.

இதனால் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தது படக்குழு, அவ்வப்போது மணல் காற்று வீசியதால், புழுதி பறக்க படப்பிடிப்பு தடைபட்டு இருக்கிறது. மேலும் அஜர்பைஜானில் பனி பெய்து வந்தது தான் முற்றிலுமாக விடாமுயற்ச்சி படம் தடைபட்டு இடையில் நிற்க காரணமாக இருந்திருக்கிறது. இடைவெளி விட்டு இடைவேளை விட்டு படபிடிப்பை நடத்தி வந்ததால், படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் செலவு ஏற்பட்டு இருக்கிறது.

இப்படி பல தடைகளை கடந்து படம் ரிலீசுக்கு தயரான போது, இது ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்டது என அந்த ஆங்கில படத்தின் தயாரிப்பு நிறுவனம், விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆவதற்கு தடையாக இருந்தது, அதையும் கடந்து திரைக்கு வந்துள்ள விடாமுயற்சி படம், ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை, அதாவது எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்ற பேமிலி ஆடியன்ஸ் க்கு தான் இந்த படம் பிடித்து இருக்கிறது, மற்ற படி இளைஞர்களை விடாமுயற்சி திருப்தி படுத்தவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனிடம் கதை கேட்டு, கமிட் செய்த அஜித் குமார், பின்பு கதை பிடிக்கவில்லை என விக்னேஷ் சிவனை கழட்டி விட்டது, நயன்தாரா மனதளவில் பாதிக்கப்பட்டு, நயன்தாராவின் சாபம் தான் விடாமுயற்சி படம் படப்பிடிப்பு தொடங்கியது முதல், ரிலீஸ் ஆவது வரை சிக்கலில் சிக்கி, தற்பொழுது படம் வெளியாகியும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இல்லாமல் அமைந்து விட்டது என்கிறார்கள் நயன்தாரா ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here