நயன்தாராவின் அட்டூழியம்.தாங்க முடியமால் அஜித் டென்ஷனில் எடுத்த முடிவு… என்ன அட்டுழியம் தெரியுமா.?

0
Follow on Google News

அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த போது அஜித்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு நயன்தாராவுக்கு கிடைத்தது. அந்த வகையில் நயன்தாரா மீது ஒரு மரியாதை அஜித்துக்கு உண்டு. இதனை தொடர்ந்து தன்னுடைய ஆசை காதலன் விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்பு கேட்டு பலமுறை அஜித்திடம் கோரிக்கை வைத்துள்ளார் நயன்தாரா.

நயன்தாரா தொடர் சிபாரிசு காரணமாக விக்னேஷ் சிவனை அழைத்து கதை கேட்ட அஜித், தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவனுக்கு கொடுத்தார். இந்த படம் தயாரிக்கும் வாய்ப்பு லைக்கா நிறுவனத்திற்கு கிடைத்தது. அஜித்திடம் கால் சீட் கிடைத்து விட்டததால் இரட்டிப்பு மகிழ்ச்சியிலிருந்து லைக்கா நிறுவனம், அஜித் தேர்வு செய்த இயக்குனர் என்பதற்காக விக்னேஷ் சிவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டத் தொடங்கினார்கள்.

அஜித் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு 10 கோடி சம்பளம் கேட்ட விக்னேஷ் சிவன், அந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க 15 கோடி சம்பளம் கேட்டுள்ளார், இயக்குனரிடம் எதாவது பிரச்சனை என்றால் இந்த படம் கைவிடப்பட்டு அஜித் கால் சீட் கிடைக்காது என்பதற்காக விக்னேஷ் சிவன் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டி வந்துள்ளது லைக்கா நிறுவனம் அதனடிப்படையில் விக்னேஷ் சிவன் கேட்கும் சம்பளத்தை கொடுக்கவும் முன் வந்துள்ளது.

புதிய படத்திற்கான வேலைகளை விக்னேஷ் சிவன் தொடங்கியது முதல், இந்த படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனா.? அல்லது நயன்தாராவா.? என்கிற அளவுக்கு நயன்தாராவின் தலையீடு அதிகமாக இருந்துள்ளது, மேலும் தயாரிப்பாளர் தரப்பில், அல்லது அஜித் தரப்பில் எதாவது அறிவுறுத்தப்பட்டால் அதை தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

ஒரு கட்டத்தில் நயன்தாரா இந்த படத்தில் இருந்து விலகியதும், அவருக்கு பதில் திரிஷா நடிக்க அஜித் சிபாரிசு செய்துள்ளார், ஆனால் நயன்தாரா தலையிட்டு விக்னேஷ் சிவனிடம் வேண்டாம் என மறுக்க செய்ய வைத்துள்ளார். இப்படி நயன்தாரா இந்த படத்தில் இருந்து விலகினால் கூட அவருடைய தலையீடு தொடர்ந்து இருந்து வந்துள்ளது.இது தயாரிப்பு தரப்பு மற்றும் அஜித் ஆகியோருக்கு நாளுக்கு நாள் விக்னேஷ் சிவன் மீது கோபத்தை அதிகரிக்க செய்து வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் படம் தொடக்குவதர்க்கு முன்பே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அட்ராசிட்டிகள் ஓவராக இருக்கிறது. படம் தொடங்கப்பட்டு விட்டால், இவர்கள் ஆட்டம் ஓவராக இருக்கும் என உணர்ந்த நடிகர் அஜித் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனை நேரில் அழைத்து மீண்டும் படத்தின் கதையை கேட்டவர், கதை எனக்கு பிடிக்கவில்லை வேறு ஒரு இயக்குனரை மற்ற வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்தை வலியுறுத்தி உள்ளார் அஜித்.

மேலும் இயக்குனரை மாற்றுவதால் உங்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லையே.? என அஜித் தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்க, சார் உங்களுக்காக தான் பொறுமையாக இருந்தோம் என, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அட்ராசிட்டி பற்றி எடுத்து சொன்னவர்கள், உங்கள் கால் சீட் கிடைத்தால் போதும் என்று தான், இவர்களின் அட்டூழியத்தை பொறுத்து கொண்டிருதோம் என அஜித்திடம் தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனிடம் கதை கேட்டுவிட்டு தான் அஜித் கமிட்டானார், ஆனால் மீண்டும் கதையை கேட்டு வேண்டாம் என விக்னேஷ் சிவனை வெளியேற்றுவதர்க்கு காரணம், நயந்தாராவின் அட்ராசிட்டி தான் என்றும், மேலும் படப்பிடிப்பு தொடங்கினால், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் அட்டூழியம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால் தான் அஜித் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.