அய்யோ போச்சே… அட்லீயால் ஏமாற்றப்பட்ட நயன்தாரா… இப்படியா நம்பவெச்சு ஏமாற்றுவது..

0
Follow on Google News

சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் இருந்த நயன்தாரா மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின்பு நயன்தாரா நடிப்பில் வெளியான படங்கள் மிக பெரிய தோல்வியை சந்தித்தது, அதில் இரண்டு படங்களும் ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்பதால் இந்தப்படத்தின் முழு தோல்விக்கும் நயன்தாரா தான் காரணம் என முத்திரை குத்தப்பட்டார் நயன்தாரா.

இந்நிலையில் நயன்தாராவின் மார்க்கெட் வீழ்ச்சி, மற்றும் கால் சீட் இழுத்தடிப்பு காரணமாக அவரிடம் படத்தில் நடிக்க கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுங்க என தயாரிப்பாளர்கள் வாங்கி வந்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில் நயன்தாரா கைவசம் தற்போது பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் இல்லை, அதே நேரத்தில் நடிகர் சாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா.

ஜவான் படம் விரைவில் திரைக்கு வர இருப்பதால், ஏற்கனவே சினிமாவிலிருந்து விலகி பிரபுதேவாவை திருமணம் செய்ய போன நயன்தாரா, பிரபுதேவாவின் உறவை முடித்துக் கொண்டு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து வெற்றி கொடுக்க மிகப்பெரிய உதவியாக இருந்தது அட்லீ இயக்கத்தில் நடித்த ராஜா ராணி திரைப்படம். அதே பார்முலா தற்போது கைகொடுக்கும் என்றும், மேலும் சென்டிமெண்டாக ரீ என்ட்ரிக்கு அட்லி ராசியான இயக்குனராக இருப்பார் என அட்லியை மல போல் நம்பி இருந்தார் நயன்தாரா.

தன்னுடைய நடிப்பில் வெளியாக இருக்கும் ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சினிமாவில் இழந்த மார்க்கெட்டை மீட்டெடுத்து மூன்றாவது இன்னிங்க்சில் ஒரு ரவுண்டு வரும் திட்டத்தில் இருந்து வருகிறார் நயன்தாரா, மேலும் தற்பொழுது பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள நயன்தாரா முதல் படமே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன சாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு ஷாருக்கான் நேரில் வந்து வாழ்த்தியது, அதேபோன்று நயன்தாரா குழந்தைகளுக்கு சாருக்கான் வாழ்த்தியது என நயன்தாராவுக்கும் ஷாருக்கானுக்கும் இருக்கும் நெருக்கம் பாலிவுட் சினிமாவில் நயன்தாராவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இந்த ஜவான் திரைப்படம் பெற்றுத்தரும் என்றும், அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்துவிடலாம் என்கின்ற பெரும் கனவில் இருந்து வந்த நயன்தாராவுக்கு தற்பொழுது ஜவான் படத்தில் தனக்கு நேர்ந்தது கொடுமை மிகப்பெரிய சோகத்திலும் அட்லி மீது கடுப்பிலும் உள்ளாராம்.

விரைவில் வெளியாக இருக்கும் ஜவான் திரைப்படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்கு முன்பு நயன்தாராவுக்கு அந்த படம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. அப்போது நயன்தாரா ஜவான் படத்தை பார்த்தபோது மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். அதாவது நயன்தாரா நடித்த பெரும்பாலான காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அந்த படத்தில் இடம்பெறவில்லை என்பதால் , மிக குறுகிய காட்சிகளில் மட்டுமே நயன்தாரா வந்து செல்வதாக கூறப்படுகிறது.

இதனால் தொடர்ந்து கால் சீட் கொடுத்து அதிக காட்சிகளில் தான் நடித்துள்ளேன் இருந்தாலும் பெரும்பாலான காட்சிகளை கட் செய்துள்ளதாக இயக்குனர் அட்லி மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறாராம் நயன்தாரா. அந்த வகையில் பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்று விடுவோம் அந்த அளவுக்கு தன்னுடைய கதாபாத்திரம் அமைந்துள்ளது என ஒவ்வொரு காட்சிகளிலும் தன்னுடைய முழுன் திறமையும் வெளிப்படுத்தி வந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நயன்தாராவிற்கு இந்த படத்தில் ஒரு கேமியோ ரோல் போன்ற தன்னுடைய காட்சியை அட்லீ சுருக்கி உள்ளது நயன்தாராவை கடும் அப்செட்டில் ஆக்கியுள்ளது.

மேலும் சினிமாவில் ரீ – என்ட்ரி கொடுக்க அட்லீயின் ராஜா ராணி படம் அமைத்து போன்று இல்லாமல், ஜாவான் படத்திற்கு பின்பு மெயின் கேரக்டர் இல்லாமல் சின்ன கேரக்டரில் நடிக்க தான் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் இனி வரும் என்றும் அந்த வகையில் நயன்தாராவின் ஹீரோயின் நடிப்புக்கு ஜவான் படத்தின் மூலம் அட்லீ முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நயன்தாரா காட்சிகள் பெரும்பாலானவையை படத்தில் இருந்து தூக்கி விட்டதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.