எனக்கே துரோகம் செய்கிறியா.. விக்னேஷ் சிவன் கழுத்தை பிடித்த வெளியில் தள்ளிய நயன்தாரா.. ஏன் தெரியும்.?

0
Follow on Google News

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் உச்சகட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலாக வெடித்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு, பிரபுதேவா என தொடர்ந்து காதல் தோல்வியை சந்தித்து வந்த நயன்தாரா, சிறிய இடைவெளிக்கு பின்பு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தவர், மூன்றாவது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வருகிறார் நயன்தாரா.

சிம்பு, பிரபு தேவா இருவரும் தனக்கு உண்மையாக இல்லை என்பதை உணர்ந்து நயன்தாரா இருவரும் தன்னை திட்டமிட்டு ஏமாற்றுவதை புரிந்து கொண்டு அவர்களை விட்டு இவர் தான் காதலை முறித்து கொண்டு விலகினார். இந்நிலையில் தற்பொழுது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

காற்று வாக்கில் இரண்டு காதல் படம் முடியும் தருவாயில் இருக்கையில், தற்பொழுது படத்தின் கதை நயன்தாராவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக நடிக்கிறார் நயன்தாரா, திருமணம் முடிந்த விஜய்சேதுபதியை காதலிக்கு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சமந்தா. இந்த இரண்டு கதாநாயகிகளிடம் சிக்கி விஜய்சேதுபதி என்ன செய்கிறார் என்பது படத்தின் கதை என்பது படத்தின் ட்ரைலர் பார்த்தவர்களுக்கு புரியும்.

இந்த கதை பிரபுதேவாவை நயன்தாரா காதலித்த போது, பிரபு தேவா மனைவி ரமலத் மற்றும் நயன்தாராவுக்கு இடையில் நடந்த சம்பவங்கள் போன்று படத்தின் கதை அமைத்துள்ளதால் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் சமந்தா உடன் விக்னேஷ் சிவன் நெருங்கி பழகி வந்துள்ளார். இருவரும் நயன்தாராவுக்கு தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சமந்தா உடன் ஜோடியாக இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவன் அங்கே இருவரும் மிக நெருக்கமாக இருந்துள்ளனர், பார்ட்டி முடிந்ததும் அன்று இரவு ஒன்றாக இருவரும் தங்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த நயன்தாரா செம டென்ஷனில் உனக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்கிறேன் , நீ எனக்கே துரோகம் செய்கிறாய்..என விக்னேஷ் சிவனிடம் சண்டையிட்டுள்ளார் நயன்தாரா.

மேலும்.. புதியாக துபாயில் தொடங்க இருக்கும் தொழிலில் காதலன் விக்னேஷ் சிவனையும் ஒரு பாட்னராக சேர்த்து கொள்வதர்க்கு ஏற்பாடு செய்து வந்தார் நயன்தாரா. ஆனால் எனக்கே ..நீ துரோகம் செய்கிறாய் ..உன்னை இனி நம்ப முடியாது என முகத்தில் அடித்தது போல் தெரிவித்துவிட்டு, துபாயில் தொடங்க இருக்கும் புதிய தொழில் விக்னேஷ் சிவனை பார்ட்னரில் சேர்க்க வேண்டாம் என என்னுடைய முதலீட்டில் நான் ஒருவர் மட்டுமே பங்குதாரர் என மற்ற சக முதலீட்டார்களிடம் அதிரடியாக தெரிவித்துள்ளார் நயன்தாரா என கூறப்படுகிறது.

இந்நிலையில் அட்ரஸ் இல்லாமல் இருந்த விக்னேஷ் சிவனுக்கு தேவையான அணைத்து உதவிகளையும் செய்து வந்த நயன்தாராவுக்கு மிக பெரிய துரோகத்தை செய்து விட்டார் விக்னேஷ் சிவன், அதனால் தான் கழுத்தை பிடித்து வெளியில் தள்ளியது போன்று புதிய தொழில் நிறுவனத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கி அதிரடி காட்டியுள்ளார் நயன்தாரா என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

நீ யோக்கியமா.? ஐஸ்வர்யா கள்ள உறவை போட்டு உடைத்த தனுஷ்..! பிரிவுக்கு இது தான் காரணமாம்..