அட்லீயுடன் சண்டையிட்ட நயந்தாரா… நான் குடும்ப பெண்.. அதை மட்டும் செய்ய மாட்டேன்… என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை நயன்தாரா கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர், இவருடைய தந்தை இந்தியன் விமானப்படையில் பணியாற்றியவர். நயன்தாரா சகோதரர் துபாயில் தொழில் அதிபராக இருக்கின்றார். நயன்தாரா தந்தை விமான படையில் வேலை செய்ததால், இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு அடிக்கடி பணியிடை மாற்றம் செய்யப்பட்டு வந்தார். அந்த வகையில் இந்தியாவில் உள்ள குஜராத், டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் தன்னுடைய பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் நயன்தாரா முடித்தார்.

கிறிஸ்துவ குடும்பத்திலிருந்து வந்த நயன்தாரா தொடர்ந்து, கிறிஸ்தவ வழிமுறைகளை பின்பற்றி வந்தார். இந்நிலையில் நடிகர் பிரபுதேவாவை காதலித்த நயந்தாரா, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது, பிரபுதேவாவுக்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா. இவர்களின் திருமணம் இந்து முறைப்படி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

ஆனால் நயன்தாரா- பிரபுதேவா இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்களின் திருமணம் தடை பெற்றது. இருந்தும் தொடர்ந்து இந்து மதத்தை பின்பற்றி வந்தார் நயன்தாரா இதன் பின்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கிய நயன்தாரா தெய்வ பக்தி கொண்டவராக உருவெடுத்தார். காதலன் விக்னேஷ் சிவன் உடன் இந்தியா முழுவதும் உள்ள இந்து திருத்தலங்களுக்கு ஜோடியாக சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தார் நயன்தாரா.

இந்து முறைப்படி உள்ள ஜாதகங்கள் மீதும் அதீத நம்பிக்கை கொண்டவராக உருவெடுத்த நயன்தாரா, திருமணத்திற்கு முன்பு நயன்தாராவுக்கு சில தோஷங்கள் கழிக்கப்பட வேண்டும் என்று ஜோதிடரின் அறிவுறுத்தலின்படி நயன்தாரா முக்கிய திருத்தலங்களுக்குச் சென்று ஜோதிடர் ஆலோசனைப்படி விக்னேஷ் சிவன் உடன் சுவாமி தரிசனம் செய்து வந்தார்.

இந்த நிலையில் ஜாதகம் பார்த்து முகூர்த்தம் நாள் குறித்து, இந்து முறைப்படி தன்னுடைய திருமணத்தை திருப்பதியில் நடத்துவதே நயன்தாராவின் விருப்பமாக இருந்தது. ஆனால் திருப்பதி தேவஸ்தானத்தின் விதிமுறைப்படி மாற்று மதத்தினர் திருப்பதியில் திருமணம் செய்வதற்கு அனுமதியில்லை, ஆகையால் நயன்தாரா அடிப்படையில் ஒரு கிறிஸ்துவர் என்பதால் திருப்பதியில் இவர்கள் திருமணத்திற்கு அனுமதியில்லை என்று கூறப்படுகிறது.

இதன் பின்பு மகாபலிபுரம் அருகே இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, ஹனிமூன்காக தாய்லாந்து சென்றனர், திருமணத்திற்கு பின்பு வெளியாகும் நயன்தாரா புகைப்படத்தில் அவருடைய தாலி முக்கிய இடம் பிடித்து வந்தது. இந்த நிலையில் ஹனிமூன் முடித்து அட்லீ இயக்கும், ஷாருக்கான் ஜோடியாக ஏற்கனவே கமிட்டாகி இருந்த ஜவான் படத்தின் மும்பை படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் நயன்தாரா.

ஜவான் படத்தின் படப்பிடிப்பின் போது, நயன்தாரா கழுத்தில் இருக்கும் தாலியை கழட்ட வேண்டும் என அட்லீ தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு, அதெல்லாம் முடியாது, தாலி மறைக்கும் படி காஸ்ட்யும் தயார் செய்ங்க, எந்த ஒரு காரணத்திற்காகவும் தாலியை கழட்ட மாட்டேன் என தெரிவித்துள்ளார் நயன்தாரா. படப்பிடிப்பு நடந்த அடுத்த சில நாட்களில் சில காஸ்ட்யும் நயன்தாரா தாலியை மறைக்கும் படி செட்டாகவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இயக்குனர் தரப்பில் இருந்து, நயன்தாராவிடம், இந்த காஸ்ட்யும் தாலி மறைக்கும் படி செட் ஆகாது, அதனால் தாலியை இந்த ஒரு கட்சிக்கும் மட்டும் கழட்டி வைக்க முடியுமா என கேட்க, சட்டென்று டென்ஷனான நயன்தாரா, அதெல்லாம் முடியவே முடியாது, இனி தாலியை கழட்ட வேண்டும் என்று என்னிடம் பேசவே கூடாது. தாலியை மறைக்க முடியவில்லை என்றால் வேறு ஒரு காஸ்ட்யும் மாற்றுங்கள் என நயன்தாரா திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தான் கைவசம் இருக்கும் படத்தில் நடிக்கும் அணைத்து இயக்குனரிடமும் தாலியை கழட்ட மாட்டேன் என கண்டிஷன் போட்டுவிட்டாராம் நயந்தாரா என கூறப்படுவது குறிப்பிடதக்கது.