கிழவியான நயன்தாரா… திருமணத்தில் கிழவி தோற்றத்தை மறைக்க நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது, விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சிம்பு மற்றும் பிரபு தேவா இருவரையும் காதலித்த நயன்தாரா, இரண்டு காதலும் தோல்விக்கு பின்பு மூன்றாவது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு காதல் தோல்வியை தழுவிய நிலையில், முன்றாவது காதலன் விக்னேஷ் சிவன் எத்தனை நாட்களுக்கு தான் என கிண்டலாக விமர்சனம் செய்தவர்கள் முகத்தில் கரியை பூசுவது போன்று, தனது முன்றாவது காதலில் வெற்றி பெற்றுள்ளார் நயன்தாரா. நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா நடிக்க கதை சொல்ல ஆட்டோவில் சென்ற விக்னேஷ் சிவன் கதை பிடித்து படத்தில் நடிக்க ஒப்பு கொண்ட நயன்தாரா, பின்பு படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவனை பிடித்து போக அத காதலாக மலர்ந்துள்ளது.

மேலும் விக்னேஷ் சிவனுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால், நயன்தாரவின் மேனேஜர், பாதுகாவலர், உதவியாளர் என நயன்தாராவின் அனைத்துக்குமானவர் விக்னேஷ் சிவன் என்பது போன்று வலம் வர தொடங்கினார். நயன்தாரா மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரிக்க அவருடைய சம்பளமும் அதிகரித்து கொண்டே சென்றது. இதனால் நல்ல வருமானம் வரும் பொழுது எதற்கு திருமணம் என நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் தடைபெற காரணமாக அமைந்தது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரின் நடிப்பில் வெளியான படம் காற்று வாக்கில் இரண்டு காதல், இந்த படத்தில் நயன்தாரா முகத்தில் டொக்கு விழுந்தது போன்றும், கழுத்து மற்றும் கைகளில் தோள்கள் சுருங்கிய நிலையில் முதிர்கன்னி போன்று காட்சியளித்தது, அவரது ரசிகர்களுக்கு ரசிக்கும்படி இல்லை. இதனால் நயன்தாராவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் வந்தது.

இதற்கு காரணம் நயன்தாரா உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற மேற்கொண்ட சிகிச்சையின் காரணமாக தான் இப்படி வத்தலும், தொத்தலுமாக மாறியுள்ளார் மேலும் 40 வயதை தொடும் நயன்தாரா முதிர்கன்னியாக காட்சியளிக்காமல் வேறு எப்படி காட்சியளிப்பார் என்கிற கருத்தும் நிலவியது, இதனை தொடர்ந்து தனது திருமணத்தில் தனது தோற்றத்தை பார்த்து கிழவி போல் இருக்கிறார் என்று விமர்சனம் வந்து விட கூடாது என்பதற்காக பலே திட்டம் போட்ட நயன்தாரா.

தன்னுடைய முகம் தவிர்த்து வேறு ஏதும் வெளியில் தெரிந்து விட கூடாது என்பதற்காக, கழுத்து முழுவதும் மறைத்தும், இரண்டு கைகள் முழுவதும் மறைத்து ஜாக்கெட் அணிந்து காட்சியளித்தார். மேலும் திருமணம் முடிந்து அடுத்த நாள் திருப்பதி சென்ற நயன்தாரா அதே போன்ற உடை அணிந்திருந்தார், முகம் இளமை தோற்றத்துடன் காட்சியளிப்பது போன்று மேக்கப் போட்டு கொண்டு, கை மற்றும் கழுத்து பகுதிகள் தோல் சுருங்கிய நிலையில் இருப்பதால் அதை மறைத்து தற்பொழுது அதற்கேற்ற உடையை அணிந்து காட்சி தரும் நயன்தாரா மீண்டும் இளமையாக காட்சியளிக்க விரைவில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா திருமணத்தில் அவமானப்படுத்தப்பட்ட சினிமா பிரபலங்கள்.. யார் அந்த பிரபலங்கள் தெரியுமா.?