நயன்தாராவுக்கு குவியும் கோடி கோடியாய் பணம்… அப்படி என்னெல்லாம் தொழில் செய்கிறார் நயன்தாரா தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை நயன்தாராதான் தமிழ் சினிமாவில் அதிக வருமானம் வாங்கும் நடிகைகளில் முதல் ஆளாக இருக்கிறார். மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க இவர், முதலில் மிகக் குறைந்த சம்பளத்திற்கே நடித்து வந்தார். தமிழில் ஐயா திரைப்படம் மூலம் என்ட்ரி ஆன இவருக்கு, இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்ததை போலவே, சந்திரமுகி திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

அப்போதெல்லாம் தமிழில் குறைந்த சம்பளம் வாங்கிய நயன்தாரா, தற்போது தமிழ் சினிமா துறையிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருமாறியிருக்கிறார். இந்நிலையில் தான் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாராவிற்கு, நடிப்பே சைடு பிசினஸாக ஆகும் அளவுக்கு செம்ம பிசியான தொழிலதிபராக வலம் வருகிறார். அதுவும், ஒன்றல்ல, இரண்டல்ல, தமிழ்நாட்டில் இருந்து துபாய் வரையிலும் பல பிசினஸ் செய்து தொழிலதிபராக கொடிகட்டி பறந்து வருகிறார்.

இந்நிலையில் தான், அவர் என்னென்ன பிசினஸ் செய்கிறார் என்ற, லிஸ்ட் ஆனது அதிரடியாக வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா ஒரு படத்திற்கே 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். குறிப்பாக அன்னபூரணி படத்திற்கு இவர் 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார் என்றும் கூறப்பட்டது. மேலும் நயன்தாராவின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ.200 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது.

அதோடு தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய பெண் தொழிலதிபர்களின் லிஸ்டில் நயன்தாரா தான் நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் தான் இவர் சினிமா துறைக்கு வந்தது முதலே, அவருக்கு வரும் வருமானத்தை வேறு வேறு தொழில்களில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார். சின்ன சின்ன டீக்கடைகள், பெட்ரோல் பங்க் தொடங்கி, பெரிய பெரிய பிசினஸ் வரை நயன்தாரா முதலீடு செய்திருக்கிறார். துபாயில் கூட அவர் பிசினஸ் செய்து வருகிறார்.

மேலும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து, ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்நிறுவனம் மூலம் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற திரைப்படத்தையும் தயாரித்து வருகின்றனர். அதேபோல் அழகு சாதன பொருட்களை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவும் கடந்த ஆண்டு நினைவானது.

அவர் 9 ஸ்கின் என்கிற நிறுவனத்தை தொடங்கி, அதில் சருமத்திற்கு தேவையான அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இதுதவிர லிப்ஸ்டிக்கிற்கு மட்டும் தனியாக லிப் பாம் என்கிற கம்பெனியையும் நடத்தி வருகிறார். மேலும் பெமி9 என்கிற நாப்கின் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன் விற்பனையும் தற்போது படுஜோராக நடைபெற்று வருகிறது.

இதுதவிர டிவைன் புட்ஸ் என்கிற நிறுவனத்திலும் பங்குதாரராக உள்ளார். அந்நிறுவனம் ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதோடு பல Advertisement-களிலும் நடித்து அதன் மூலமும் சம்பாதிக்கிறார். மேலும் நாகர்கோவிலில் ஆர்யபவன் உணவகம், இதுதவிர விக்கி பிலிக்ஸ், டார்க் டேலண்ட், கார்பன் மெட்ராஸ், கிரியேட் வெர்ஸ் போன்ற நிறுவனங்களிலும் நடிகை நயன்தாரா முதலீடு செய்து இருக்கிறார்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு, இவர், நடிப்பதை தாண்டி, பெண் தொழிலதிபர் என்ற நிலைக்கு மாறியிருக்கிறார். அதோடு இவரின் இத்தனை தொழில்களையும் தைரோகேர் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் வேலுமணி தான் நிர்வகித்து வருவதாகவும் கூறப்படுகிறது.