துபாயில் நயன்தாரா ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா.? அடேங்கப்பா….

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்த ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் சம்பாரிப்பதே பிற தொழில்களில் முதலீடு செய்து வந்தவர். சாய் வாலா என்ற சங்கிலித் தொடர் தேநீரகத்தில் முதலீடு செய்துள்ள நயன்தார, மருத்துவர் ரெனிடா விஜயன் என்பவருடன் இணைந்து ஆரம்பித்துள்ள லிப்ஸ்டிக்குகள் மற்றும் உதட்டு அழகு பொருட்கள் போன்ற தொழிலில் முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு நயன்தாரா சினிமாவில் சம்பாரிக்கும் பெரும் பணத்தை துபாயில் முதலீடு செய்து வந்தார். துபாயில் நயன்தாரா பல கோடி முதலீடு செய்து தொழில் தொடங்கும் முன்பு, இது குறித்து விக்னேஷ் சிவனிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். விக்னேஷ் சிவனும் நல்ல முடிவு என தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளை நயன்தாரா உடன் இணைந்து செய்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அணைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிறுவனத்தில் தன்னையும் ஒரு பாட்னராக நயன்தாரா இணைப்பார் என எதிர்பார்த்த விக்னேஷ் சிவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நயன்தாரா அதை செய்யவில்லை, நயன்தாரா துபாய் தொழிலை அவரது சகோதரர் கவனித்து வருவதாக கூறப்படுகிறது, துபாயில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில் முதலீடு செய்துள்ளார் நயன்தார.

கொரோனா காலத்தில் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த வருடத்தில் இருந்தே துபாய் தொழில் நல்ல லாபத்தை நயன்தாராவுக்கு பெற்று தந்து வருகிறது. மேலும் சமீபத்தில் கடந்த சில மாதங்களாகவே துபாய் தொழில் பல மடங்கு லாபத்தை பெற்று தருவதால் மிகுந்த மகிழ்ச்சியில் நயன்தாரா இருப்பதாக கூறப்படுகிறது.