அய்யோ.. நயன்தாரா அட்ராசிட்டி தாங்க முடியல… அவங்க குழந்தைக்கு ஆய் கழுவுதற்கு கூட தயாரிப்பாளருக்கு டார்ச்சர்..

0
Follow on Google News

நயன்தாரா படங்களில் நடிப்பதுடன் சேர்த்து ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களையும் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் படங்கள் மட்டுமின்றி விளம்பரம் ரீதியாகவும் நயன்தாராவின் சம்பளம் உச்சத்தில் இருப்பதாக பேச்சுகள் அடிபடுகிறது. 50 வினாடி விளம்பரத்துக்காக நயன்தாரா சுமார் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. விளம்பர நேரம் அதிகரிக்கும் போது சம்பளமும் அதிகமாக கேட்பதாகவும் கூறப்படுகிறது.

இத்தனை கோடிகளில் சம்பாதிக்கும் நயன்தாரா தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி பாதாளத்தில் தள்ளியிருக்கிறார். நடிகை நயன்தாரா படப்பிடிப்பில் தனக்காக வேலை செய்ய வரும் துணையாட்களுக்கு சம்பளம் தர மாட்டாராம், அவர் எந்த படத்தில் கமிட்-ஆகி இருக்கிறாரோ அந்த படத்தின் தயாரிப்பாளர் தான் அவர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும்.

மேலும் நடிகை நயன்தாராவுடன் சிகை அலங்காரம் செய்பவர், ஒப்பனை கலைஞர், உடை அலங்காரம் செய்பவர், டிரைவர் உள்ளிட்ட ஆறு பேர் வரிவார்கள். ஒவ்வொருவருக்கும் தினமும் 12,000 முதல் 15,000 வரை தயாரிப்பாளர்கள் பேட்டா கொடுக்க வேண்டி உள்ளது. இதன் மூலம் தினமும் தயாரிப்பாளர்களுக்கு 60,000 முதல் 70 ஆயிரம் வரை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட படப்பிடிப்பிற்கு நயன்தாரா தன் குழந்தைகளுடன் சென்றிருக்கிறார். அங்கு நயன்தாராவின் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் ஆயாவிற்கு கூட அப்படத்தின் தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது என்னடா தயாரிப்பாளர்களுக்கு வந்த சோதனை என பலரும் கூறி வருகிறார்கள்.

மலையாளத்தில் ஒரு நடிகர், நடிகைக்கு சம்பளம் என பேசிவிட்டு அக்ரிமெண்ட் போட்டு விட்டால் அவ்வளவுதான். அந்த நடிகர் அழைத்து வரும் அனைத்து துணை ஆட்களுக்கும் அந்தந்த நடிகர்கள் தான் செலவு செய்வார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகள் தான் இப்படி படத்தின் தயாரிப்பாளருக்கே வேட்டு வைக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.

நயன்தாரா மட்டுமின்றி பாலிவுட் நடிகையான கங்கானா ராணாவத் தமிழில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க வந்தபோது கூட, இப்படி ஒரு கண்டிஷன் போட்டு, தன்னுடன் வந்த துணை ஆட்களுக்கு தயாரிப்பாளரை தான் செலவு செய்ய வைத்திருந்தார். மேலும் பெண் நடிகைகள் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் அவர்களுக்கு ஒரு படி மேல் சென்று, இந்த லிஸ்டில் நடிகர் விஷ்ணு விஷாலும் இணைந்து விட்டார்.

விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு துணையாக 18 பேரை அழைத்து வந்தாராம். இதனை பார்த்து தயாரிப்பாளர் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் பரவாயில்லை நயன்தாரா குழந்தைக்கு ஆயா வேலை பார்ப்பவர்களுக்கு தயாரிப்பாளரிடம் சம்பளம் கேட்பது டூ மச் என்கிறது சினிமா வட்டாரங்கள்…