இப்படி ஏமாற்றி பணம் சம்பாரிக்கலாமா.? நடிகை நயன்தாராவை கிழித்து தொங்க விட்ட முக்கிய பிரமுகர்..

0
Follow on Google News

சமீப காலமாகவே தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர் மற்றும் நடிகையாக இருக்கும் திரை பிரபலங்கள், தனது பல மில்லியன் ஃபாலோயர்களுக்கு, இந்த ட்ரீட்மென்டை செய்யுங்கள், அந்த ட்ரீட்மெண்ட்டை செய்யுங்கள் என, தவறான சிகிச்சையை பரிந்துரைக்கும் நிகழ்வுகள் அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் நடிகை சமந்தா, வைரல் தொற்றுக்கு மூக்கில் நெபுலைசர் கருவியை வைத்துக்கொண்டு, ஹைட்ரஜன் பெராக்ஸைட் சிகிச்சையை மேற்கொள்ளுமாறு ரசிகர்களிடம் கூறியிருந்தார்.

அப்போது, லிவர் டாக் என்ற மருத்துவர் சமந்தாவின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவரை சிறையில் தூக்கி போட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சமந்தா பிரச்சனை ஓய்ந்த சூழலில், அடுத்ததாக நயன்தாராவிடம் அந்த லிவர் டாக் மருத்துவர் திரும்பியுள்ளார். நடிகை நயன்தாராவும் தனது ரசிகர்களுக்கு தவறான ட்ரீட்மென்டை பரிந்துரைத்துள்ளார் என, லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறார்.

அதன் பின்னர் நயன்தாரா அந்த போஸ்டரை டெலிட் செய்த கையோடு, அந்த டாக்டருக்கு சிறப்பான ஒரு சம்பவம் செய்திருப்பது பரபரப்பு கிளப்பி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, சினிமா மட்டுமில்லாமல், இந்தியாவில் அழகுசாதன பொருட்கள் முதல் சானிட்டரி நாப்கின் வரை விற்பனை செய்து வருகிறார். இதற்கான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருகிறார்.

அந்த வகையில் நயன்தாரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், செம்பருத்தி டீ குடிப்பது உடம்புக்கு நல்லது, நான் தினமும் செம்பருத்தி டீயை குடித்து வருகிறேன். மேலும் செம்பருத்தி டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டு, சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவை குறைகிறது. இந்த டீயை தனக்கு பரிந்துரை செய்த ஜீனியஸை டேக் செய்து, ரெசிபி வேண்டுமானால் அவரிடம் கேட்டுக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.

நயன்தாராவின் இந்த பதிவினைப் பார்த்த லிவர் டாக் மருத்துவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நயன்தாரா சொல்வது போல, செம்பருத்தி பூவில் ஆரோக்கிய நன்மைகள் எதுவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது நயன்தாரா, செம்பருத்தி டீயை சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவைக்கு நல்லது. ஃபளூவில் இருந்து காக்கிறது என கூறியிருக்கிறார்.

நயன்தாரா, செம்பருத்தி டீ சாப்பிடுங்கள், அது நன்றாக இருக்கும் என்று சொன்னதோடு நிறுத்தி இருக்கலாம். ஆனால், உடல்நலம் பற்றிய தனக்கு தெரியாத தகவலை, இன்ஸ்டாகிராமில் 8.7 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துக்கொண்டு எப்படி தவறான தகவல் கொடுக்கலாம். உண்மையில், செம்பருத்தி டீ குடிப்பதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

அந்த டீயை தினமும் குடித்து வந்தால் பூப்பெய்துவது தள்ளி போவது மட்டுமில்லாமல், குழந்தையின் எடையில் பிரச்சனை வரும். எனவே, ரீப்ரொடக்டிவ் வயதில் இருக்கும் ஆண்களும், பெண்களும் செம்பருத்தி டியை தினமும் குடிக்கக் கூடாது நல்லது அல்ல என கல்லீரல் மருத்துவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து செம்பருத்தி டீ குறித்த பதிவினை நீக்கி உள்ளார்.

இந்நிலையில் தான் இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான விஷயமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்ததை அடுத்து தற்போது நயன்தாரா அந்த மருத்துவருக்கு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரின் மூலமாக பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர், முட்டாள்களுடன் ஒருபோதும் விவாதம் செய்யாதீர்கள், அவர்கள் உங்களை மட்டமான மன நிலைக்கு இழுத்துச் சென்று விடுவார்கள், அவர்களின் அனுபவத்தால் உங்களை தோற்கடித்து விடுவார்கள் என, கடும் கோபமாக பதிவிட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் செம்பருத்தி டீ எப்படி செய்ய வேண்டும் என அந்த மருத்துவருக்கு புதிதாக ஒரு பதிவையும் போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.