இதுக்கு மேல் தாமதித்தால்.. நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு வந்த எச்சரிக்கை.. என்ன பரிகாரம் செய்தார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர், விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்து கொண்ட நேரத்தில் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் டாப் ஒன் நடிகையாக வலம் வந்தார். மேலும் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தான் நடிகை நயன்தாரா திட்டமிட்டு இருந்தார்.

அதன் படி திருமணத்திற்கு பின்பும் நடிப்பதற்கு கைவசம் அதிக படங்களை வைத்திருந்த நயன்தாரா, அதில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான், மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்த புதிய படத்திலும் ஆரம்பத்தில் நயன்தாரா தான் நடிப்பதாக இருந்தது, இதற்காக அவருக்கு 10 கோடி சம்பளம் பேசப்பட்டது, ஆனால் பல்வேறு காரணங்களால் நயன்தாரா திருமணத்திற்கு பின்பு அஜித் படத்தில் இருந்து வெளியேற்ற பட்டார் நயன்தாரா.

இந்த நிலையில் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டியதில் இருந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் பிரச்சனை மேல் பிரச்சனை சந்தித்து வருகிறார்கள். இவர்கள் எதைத் தொட்டாலும் அது மிகப் பெரிய பிரச்சினையாகவே உருவெடுத்து உள்ளது. மேலும் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டியதில் இருந்து இவர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய வருகிறது.

அந்த வகையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களுடைய திருமண நிகழ்வை பிரபல ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்தவர்கள், நயன்தாரா கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு அந்த ஓ டி டி தளம் பெருந்தொகைக்கு விலை கொடுத்து வாங்கியது, ஆனால் நயன்தாரா கழுத்தில் தாலிய கட்டிய நேரமா என்று தெரியவில்லை, இவ்வளவு பெரிய தொகைக்கு நாங்கள் வாங்க முடியாது என கைவிரித்துச் சென்று விட்டது அந்த ஓடிடி தளம் இதனால் சுமார் 25 கோடிக்கு மேல் நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு கை எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போன்று அமைந்தது.

மேலும் நயன்தாரா தயாரிப்பில் வெளியான கூழாங்குளம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது, அதனை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் மிக பெரிய தோல்வியை சந்தித்து மொத்தம் ஷேர் மட்டுமே வெறும் 1.5 கோடி மட்டுமே அந்த படத்திற்கு கிடைத்தது. மேலும் அந்த படம் இதுவரை சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் இதுவரை விற்கப்படவில்லை.மேலும் நயன்தாரா ஒப்பந்தமான பல படங்களில் இருந்து வெளியேற்ற பட்டு அவருக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகையும் திருப்பி வாங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து திருமணத்திற்கு பின்பு சிறு சிறு சறுக்கல்களை சந்தித்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் தாம்பதியினருக்கு பலத்த அடியாக விழுந்தது அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்ற பட்ட சம்பவம் தான். இந்த நிலையில் தொடர்ந்துதிருமணத்திற்கு பின்பும் அடி மேல் அடி வாங்கி வரும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் சில மாதங்களாகவே கடும் அப்செட்டில் ஏன் திருமணத்திற்கு பிறகு நமக்கு தொடர்ந்து பிரச்சனையாக வருகிறது என்கிற குழப்பத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தின் போதே, விக்னேஷ் சிவன் நெருங்கிய உறவினர்கள், திருமணம் முடிந்த உடனே குல தெய்வத்தை வந்து வழிபட்டு சென்று விட்டு தான் அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை தெரிவித்துள்ளார்கள், ஆனால் அதை ஒரு பொருட்டாகவே நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஏற்று கொள்ளவில்லை.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் உறவினர்கள் நீங்கள் குலதெய்வத்தை வந்து வழிபடும் வரை உங்களுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை தான் வந்து தீரும் என விக்னேஷ் சிவனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது, அதனை தொடர்ந்து மனைவியிடம் பேசிய விக்னேஷ் சிவன், உடனே பிரச்சனைகளுக்கு தீர்வு காண கும்பகோணம் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு இனி நமக்கு வெற்றி தான் என்கிற நம்பிக்கையுடன் திருப்பியுள்ளார்கள் என கூறப்படுகிறது.