நயன்தாரா உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உடல் ரீதியான பாதிப்பு… நலம் பெற என்ன செய்ய போகிறார் தெரியுமா.?

0
Follow on Google News

சினிமாவில் நடிகைகள் ஸ்லிம்மாக இருந்தால் தான் பட வாய்ப்புங்கள் கிடைக்கும் என்பதற்காக செயற்கையாக பல சிகிச்சைகளை மேற்கொள்வது. அது அவர்களுக்கு அபாய கட்டத்தை ஏற்படுத்திவிடுகிறது. இது அவர்களின் உயிரை கூட பறிக்கும் செயலாக அமைந்துவிடுகிறது.மருத்துவர்கள் எச்சரிக்கையை மீறி பிரபல பாப் சிங்கர் மைக்கல் ஜாக்சன் மேற்கொண்ட பிளாஸ்டிக் சர்ஜரி இறுதியில் அவரது உயிரை பறித்து விட்டது.

கனடா சின்னத்திரை நடிகை சேத்னா ராஜ், உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவர் பரிதாபமாக பலியானார், 21 வயதான இளம் நடிகை மரணம் செயற்கை முறையில் உடல் எடையை குறைக்கலாம் என திட்டமிட்ட சினிமா நடிகைகளுக்கு பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் உடல் இடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்க ஆசைப்பட்ட நடிகை நயன்தாரா எடுத்த முடிவு தற்பொழுது அவருக்கு மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கையான முறையில் உடல் பயிற்சி மேற்கொன்டு, உணவுகளை கட்டுப்பாடுகளுடன் மேற்கொண்டு உடல் எடையை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் கஷ்டப்படாமல் எளிதாக உடல் எடையை பணம் இருக்கு என்பதற்காக வினோத முறையில் செயற்கையாக நடிகைகள் எடுக்கும் முயற்சி அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் நயன்தாரா உடல் எடையை குறைக்க சமீபத்தில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

இது அவரை வத்தலும் தொத்தலுமாக மாற்றியுள்ளது. நயன்தாரா நடிப்பில் வெளியான காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் முதிர் கன்னி போன்று காட்சியளிக்கும் நயன்தாராவை திரையில் பார்த்தவர்கள் ரசிக்கும் படியாக இல்லை. மேலும் அவருடைய கன்னம் சுருங்கி வயதானவர் போன்று காட்சியளித்த நயன்தார சேலை மட்டுமே அணிந்து படம் முழுக்க காட்சியளித்தார். மற்ற உடைகள் அவருடைய உடலுக்கு செட் ஆகாது என்பதால் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

மேலும் நாளுக்கு நாள் நயன்தாரா உடல் தோற்றம் மோசமாக சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உடல் தோற்றத்தை சரி செய்ய மீண்டும் செயற்கை முறையில் சிகிச்சை மேற்கொண்டால் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என மருத்துவர்கள் நயன்தாராவை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் இழந்த அழகையும் உடல் அமைப்பையும் மீட்டெடுக்க முடிவு செய்த நயன்தாரா.

திருமணத்துக்கு பின்பு சுமார் 6 மாதம் கேரளாவில் உள்ள புகழ் பெற்ற ஆயுர்வேத சிகிச்சை பெரும் மையத்தில் அங்கேயே தங்கி சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்கு பின்பு நயன்தாரா உடல் மற்றும் அழகு தோற்றம் புது பொலிவை பெரும் என்று எதிர்பார்க்க படுகிறார், நன்றாக இருந்த உடல் அமைப்பு மற்றும் அழகையும் செயற்கையான முறையில் சிகிச்சை செய்து தற்பொழுது இழந்த அழகை மீட்க போராடி வருகிறார் நயன்தாரா என்று கூறப்படுகிறது.

திருமணத்தை வியாபாரம் செய்த நயன்தார – விக்னேஷ் சிவன்.. அட..கடவுளே.. என்ன செய்துள்ளார்கள் தெரியுமா.?