முதிர்கன்னியான நயன்தாரா.. குழந்தை பிறக்க மருத்துவர்கள் வினோத சிகிச்சை.. என்ன சிகிச்சை தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. முதல் படத்திலே ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருதேன் என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நயன்தாரா, அடுத்தடுத்து அவருக்கான பட வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் வல்லவன் படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த போது சிலம்பரசன் விரித்த காதல் வலையில் விழுந்தார் நயன்தாரா.

ஆனால் இவர்களின் காதல் மிக குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது. சிம்புவை விட்டு பிரிந்த நயன்தாரா, ஏற்கனவே திருமணம் ஆன நடிகர் பிரபுதேவாவை இரண்டாவதாக காதலிக்க தொடங்கினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னுடைய கணவரை நயன்தாராவிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று பிரபுதேவாவின் மனைவி ரமலத் தன்னுடைய குழந்தைகளுடன் போராட்டத்தில் குதித்தார்.

என்னுடைய கணவரை என்னிடம் இருந்து பிரித்த நயன்தாராவை நேரில் பார்த்தால் பளார் என்று அடிப்பேன் என ரமலத் வெளிப்படையாக தெரிவித்தார். இந்த சம்பவம் நயன்தாராவுக்கு மிக பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது. இந்நிலையில் நிச்சயதார்த்தம் வரை சென்ற பிரபு தேவா- நயன்தாரா திருமணம், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது. இதனால் இரண்டாவது காதலிலும் தோல்வியை சந்தித்தார் நயன்தாரா.

இரண்டாவது காதல் தோல்விக்கு பின்பு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த நயன்தாரா, மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். சுமார் ஏழு வருடம் விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா, ஏற்கனவே இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்ததால், எச்சரிக்கையாக விக்னேஷ் சிவன் தனக்கு நேர்மையாக இருப்பாரா.?தன்னை உண்மையாக காதலிக்கிறாரா.? என்பது போன்ற பலகட்ட பரிசோதனைக்கு பின்பு விக்னேஷ் இவனை திருமணம் செய்ய முன் வந்தார் நயந்தாரா.

இந்நிலையில் நயன்தாராவுக்கு 40 வயதை நெருங்கும் நிலையில், அவர் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் திருமணத்திற்கு பின்பு சினிமாவில் கவனம் செலுத்தி சில வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நயன்தாரா திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் வயது அதிகமான காரணத்தினால் அதெற்கெல்லாம் எதிர்காலத்தில் வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்றும் மருத்துவர்கள் நயன்தாராவை எச்சரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மருத்துவரின் ஆலோசனைப்படி, ஏற்கனவே நயன்தாராவுக்கு வயது அதிகமாகி விட்டதால் இனியும் தாமதப்படுத்தாமல் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துள்ளார் நயன்தாரா. ஆனால் நயன்தாராவுக்கு வயது அதிகமான காரணத்தினால் சில பிரச்சனைகள் இருப்பதாகவும், ஆனால் தொடர்ந்து 9 மாதங்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தால் குழந்தை பெறுவதற்க்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

இந்நிலையில் தற்பொழுது புதிய படங்களில் கமிட் ஆகாமல் தவிர்த்து வரும் நயன்தாரா, கைவசம் இருக்கும் படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முற்றிலுமாக சினிமாவில் நடிப்பதற்கு குட் பை சொல்ல இருக்கிறார் நயன்தாரா. தற்போது பாரிஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு கணவர் விக்னேஷ் சிவன் உடன் சுற்றுலா சென்றுள்ள நயன்தாரா, இந்தியா திரும்பியதும் இன்னும் ஒரு மாதத்தில் தன் கைவசம் இருக்கும் படங்கள் அனைத்தையும் முடித்து கொடுக்க இருக்கிறார்.

அதன் பின்பு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு சினிமாவுக்கு குட் பை சொல்லும் நயன்தாரா, அடுத்த ஒன்பது மாதங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி, மருத்துவர்களின் தீவிரகண்காணிப்பில் இருக்கும் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொண்ட பின்பு, சினிமாவில் சில படங்கள் தயாரித்து அவ்வப்போது சினிமாவில் தலைகாட்ட இருக்கும் நயன்தாரா, துபாயில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளதால் முழு நேர தொழில் அதிபராக உருவெடுக்க இருக்கிறார் நயன்தாரா என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.