அவரின் உறவை முறித்து கொள்ள இது தான் காரணம்.. உண்மையை உடைத்த நக்மா..! என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை நக்மா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்து வந்தார். நடிகை ஜோதிகாவின் அக்கா தான் நக்மா, தமிழ் சினிமாவுக்கு ஜோதிகாவை அழைத்து வந்து அவருக்கான பட வாய்ப்புகளை பெற்று தந்தது அவருடைய அக்கா நக்மா. 50 வயதை நெருங்கிவிட்ட நடிகை நக்மா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக தான் இருந்து வருகிறார், காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் நக்மா.

நக்மா காதல் விவகாரம் பலருக்கு தெரியாது. 90 காலகட்டத்தில் நடிகர் சரத்குமாரை காதலித்து வந்தார் நக்மா, அப்போது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக இருந்த சரத்குமார், தனியாக திருமணம் செய்து கொள்ளாமல் நக்மா உடன் குடித்தனம் நடத்துகிறார் என்கிற செய்தி கூட வெளியானது. தொடர்ந்து தமிழில் சுமார் நான்கு படங்கள் வரை சரத்குமார் உடன் ஜோடி சேர்ந்து நடித்த நக்மா பொது இடங்களுக்கு எங்கே சென்றாலும் சரத்குமார் உடன் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில் திருமணத்துக்கு முன்பே நக்மாவுக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளார் சரத்குமார், இதற்கு நக்மா ஒப்பு கொள்ளவில்லை, மேலும் நக்மா – சரத்குமார் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட, ஒரு கட்டத்தில் சரத்குமாரை தூக்கி எரிந்துவிட்டு நீ எனக்கு தேவையே இல்லை என புறப்பட்டு சென்றார்.

இதன் பின்பு பிற மொழி படங்களில் பிசியான நடிகை நக்மா. அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த கங்குலியுடன் நெருக்கி பழக தொடங்கினர், இவர்கள் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் நக்மா உடன் நெருக்கமான பழகிய பின்பு கிரிக்கெட் விளையாட்டில் மிக மோசமான விளையாட்டை வெளிப்படுத்தினர் கங்குலி, இதனால் கடும் விமர்சனம் எழுந்தது.

மேலும் கங்குலி வீட்டிலும் நடிகை நக்மா உடன் கங்குலி சுற்றி வருவது குறித்து அடிக்கடி பிரச்சனை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் கங்குலி – நக்மா ஜோடி பிரிந்தது. ஆனால் இவர்கள் பிரிந்த பின்பு இருவரும் பிரிவுக்கான காரணத்தை வெளியில் சொல்லமால் மௌனமாக இருந்து வந்த நிலையில், நடிகை நக்மா இது குறித்து வாய் திறந்துள்ளார் அவர் கூறியதாவது, எங்களுடைய காதலுக்கு தடையாக இருந்தது எங்களுடைய கெரியர் தான்.

கங்குலி போட்டியில் சரியாக விளையாடாமல் இருந்த போது ரசிகர்கள் எங்களை குறை சொன்னார்கள், அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு எங்களுடைய உறவு தடையாக இருந்ததால், எங்களுடைய உறவை முறித்துக் கொள்ள தயாராக இருந்தோம். முக்கியமாக எங்களின் இருவரின் காதல் விவகாரம் தவறான முறையில் செய்திகள் வெளியானது, இதனால் தான் நாங்கள் இருவரும் பிரிந்தோம், இருவரும் நல்ல விஷயத்துக்காக தான் பிரிந்தது என்பதில் மகிழ்ச்சி தற்போதும் கங்குலி மீது நல்ல மரியாதை வைத்துள்ளேன் என நக்மா தெரிவித்துள்ளார்.

நீ யோக்கியமா.? ஐஸ்வர்யா கள்ள உறவை போட்டு உடைத்த தனுஷ்..! பிரிவுக்கு இது தான் காரணமாம்..