நடிகை மீனா பற்றி உங்களுக்கு என்ன தெரியும்… கோபத்தில் கொந்தளித்த நடிகர் சரத்குமார்..

0
Follow on Google News

சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் பல நடிகர் நடிகைகள் குறித்த கிசுகிசுக்களும், அதோடு அவர்களின் திருமணம், விவாகரத்து, குடும்ப பிரச்சனைகள் என அனைத்துமே பேசுபடுபொருளாக மாறி வருகிறது. அந்த வகையில் தான் நடிகை மீனா பற்றிய கிசுகிசுப்புகளும், அதோடு நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் இரண்டாம் தாரமாக திருமணம் செய்கிறார், அந்த மாப்பிள்ளை பயங்கரமானவர், மோசமானவர் என்றும், பல தகவல்கள் பரவியது.

இவ்வாறு தரை குறைவாக விமர்சிப்பவர்களை லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறார் சரத்குமார். youtube சேனல்களில் சினிமா பிரபலங்கள் பற்றி தரகுறைவாக பேசுபவர்கள் குறித்து சரத்குமாரிடம் கேட்ட கேள்விக்கு, அதெல்லாம் ரொம்பவே தவறான விஷயம் என பொங்கி இருக்கிறார். மேலும் யூடியூப் சேனல்களில் சினிமா பிரபலங்கள் பற்றி எதுவுமே தெரியாமல் அருகில் இருந்து பார்த்தவர்களை போல படுமோசமாக பேசும் நபர்கள் புழுக்களுக்கு சமமானவர்கள் எனவும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், யூடியூப் சேனல்களில் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர், பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பேசி வரும் நிலையில், சரத்குமாரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதோடு நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் க்கும், தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் ஆகியவருக்கும் தாய்லாந்தில் திருமணம் நடந்து முடிந்தது. அப்போது வரலட்சுமி சரத்குமாரை வாழ்த்தியவர்களை விட, விமர்சனங்களை அள்ளி வீசியவர்கள் தான் அதிகம்.

குறிப்பாக மாப்பிள்ளையை உருவ கேலி செய்தது, அதோடு அவரது கேரக்டர் பற்றி தவறாக பேசியது, அவர் 2ம் தாரமாக தான் வரலட்சுமியை திருமணம் செய்துக் கொள்கிறார் என்றும், வரலட்சுமி சரத்குமாரின் கணவர் நிக்கோலாய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்றும் ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், அதற்கும் சரத்குமார் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.

திருமண உறவில் ஏன் விரிசல் வருகிறது, யாருக்கு யாருடன் ரிலேஷன்ஷிப் ஒத்துப் போகிறது, அதற்கான உண்மையான காரணம் உள்ளிட்டவை சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். தேவையில்லாமல், அதற்கு கமெண்ட் செய்வது, மோசமாக பேசுவது எல்லாம் தவறான செயல் என விளாசியுள்ளார். மேலும் நாட்டாமை உள்ளிட்ட சில படங்களில் சரத்குமாருடன் மீனா இணைந்து நடித்துள்ளார்.

நடிகை மீனா குறித்து சமீபத்தில் சோஷியல் மீடியாவில் படுமோசமாக கிளம்பி வருகிறது. நடிகை மீனாவின் கணவருக்கு நுரையீரல் தொற்றி ஏற்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார், இவரின் இழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் கணவரின் இறப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த மீனா, தற்போது தான் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் அவர் மீது தற்போது வைக்கப்படும் வதந்திகள் அவரை மீண்டும் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைக்கும் அளவிற்கு பரவி வருகிறது. மீனா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், பிரபல டாப் ஹீரோ ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், மேலும் ஒரு அமைச்சர் ஒருவருடனும் தொடர்பில் இருப்பதாகவும் பல வதந்திகள் பரவியது. இந்நிலையில் இதற்கு எதிராக அவரே கண்டனம் தெரிவிக்கும் விதமாக ட்வீட் போட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து தான், பேட்டியின் போது பேசிய சரத்குமார், நடிகை மீனா பற்றி எப்படி தப்பு தப்பா பேசலாம் எனக் கேட்டிருந்தார். அதோடு பேசுபவர்களிடம் ஏதாவது ஒரு ப்ரூஃப் இருக்குமா? இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவது ரொம்பவே தப்பு. அரசு நினைத்தால் இவர்களை எல்லாம் ஓவர் நைட்டில் கட்டுப்படுத்தலாம் என தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.