டேய் லூசு.. மூடிட்டு போவியா..வந்துட்டானுக பொறுக்கிக..! கேள்வி கெட்டவரை வெளுத்து வாங்கிய குஷ்பு… என்ன கேள்வி தெரியுமா.?

0
Follow on Google News

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை செய்து மரணம் அடைத்தார். இவர் படித்த பள்ளி நிர்வாகம் இவரை மதம் மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் அதன் காரணமாக தான் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என மாணவியின் பெற்றோரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவுக்கு நீதி வேண்டும் என பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சிறுமியை கட்டாய மதமாற்றம் செய்யச்சொல்லி பள்ளி நிர்வாகத்தினரும் பல தொல்லைகள் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சிறுமி வீடியோவில் பேசியுள்ளார். கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான் அவர் உயிரிழந்தார். ஆனால் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்காமல் உள்ளார், இதில் உண்மை இருக்கிறது என அவருக்குத் தெரியும். மாணவி மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை ஓய மாட்டோம், அவரது மரணத்திற்கு ஒரு கண்டனம் இரங்கல் கூட முதல்வர் தெரிவிக்காமல் உள்ளார். அவருக்கு யாரும் பேப்பரில் எழுதித் தரவில்லை என்று நினைக்கின்றேன். திமுக கூட்டணி கட்சிகள் கூட வாய் திறக்காமல் உள்ளனர், அக்கட்சித் தலைவர்கள் ஸ்டாலினிடம் பேசவே பயப்படுகிறார்கள்.

கேள்வி கேட்கும் தைரியம் துணிச்சல் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது என குஷ்பு பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், திமுகவை சேர்ந்த சாகிர் உசைன் என்பவர், தமிழகத்தில் கட்டாய மத மாற்றம் இல்லை என முதல்வர் கூற முடியுமா என கேள்வி எழுப்பும் குஷ்பு, முஸ்லிமாக பிறந்து இந்துவாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள் தான் சொல்ல வேண்டும் குஷ்பு என சாகிர் உசைன் பதிவு செய்திருந்தார்.

இதற்கு குஷ்பு, டேய் லூசு… எவன்டா மதம் மாறியது, திருமண சிறப்பு சட்டம் கேள்விப்பட்டதே இல்லையா.? இல்லை உன்னை மாதிரி கோமாளி களுக்கு யோசிக்கின்ற சக்தி இல்லையா.? வேலை இருந்தா போய் பாரு, டாக்டர் கலைஞர் பெயரை கெடுக்காதே, திமுகவில் இருந்தபோது நான் யார் என்று உனக்கு தெரியாதா.?மூடிட்டு போவியா… வந்துட்டானுங்க பொறுக்கிக என வெளுத்து வாங்கியுள்ளார் குஷ்பு.