உன் சைஸ் என்ன.? குஷ்புவின் ரூமுக்குள் நுழைந்த பிரபல இயக்குனர்… செருப்பை கழட்டிய குஷ்பு…

0
Follow on Google News

மலையாள சினிமாவில் வெளியாகி உள்ள ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமா துறையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் இந்த சம்பவம் உலுக்கி வருகிறது. அதாவது சினிமா நடிகர்களுக்கு சினிமா துறவினரால் பாதுகாப்பு இல்லை என்கின்ற ஒரு குற்றச்சாட்டு தற்பொழுது சினிமா நடிகைகள் மத்தியில் ஓங்கி ஒழித்து வருகிறது.

குறிப்பாக முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய ராதிகா, சமந்தா, குஷ்பூ, ரேவதி, குட்டி பத்மினி என பலரும் சினிமா துறையில் நடக்கும் அவலங்களை எடுத்துரைத்து தான் வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் விஷால் சமீபத்தில் பேட்டியில் இது போன்ற செய்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஆக்ரோஷமா தெரிவித்து விட்டு சென்றார்.

ஆனால் இது குறித்து நடிகை ராதிகா பேசுகையில் ஒரு youtube சேனலில் அமர்ந்து கொண்டு ஒருவன் பத்திரிகையாளர் என்கின்ற போர்வையில் நடிகைகள் எல்லாம் அட்ஜஸ்மென்ட் செய்தால்தான் சினிமாவில் இருக்க முடியும் என்று பேசுகிறான், விஷாலுக்கு தைரியம் இருந்தால் அந்த நபரை செருப்பால் அடிப்பாரா.? விஷால் ஆம்பளை தானே செருப்பால் அடிக்கட்டும், நானும் கூட துடைப்பையை எடுத்துட்டு வருகிறேன், விஷாலுக்கு தைரியம் இருக்கா என்று விஷாலுக்கு சவால் விடுத்து இருந்தார் நடிகை ராதிகா.

மேலும் கேரளா சினிமாவில் கேரவனுக்குள் நடிகைகள் துணி மாற்றுவதை ரகசிய கேமரா மூலம் படபிடிக்கும் சம்பவங்களும் உள்ளது என்கின்ற ஒரு தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் நடிகை ராதிகா. இதனை தொடர்ந்து நடிகை சமந்தா மலையாள சினிமாவில் எப்படி ஹேமா அறிக்கை வெளியானதோ, அதேபோன்று ஒரு அறிக்கையை தெலுங்கானா அரசு வெளியிட்டு தெலுங்கு சினிமா துறையிலும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

அதேபோன்று நடிகை குட்டி பத்து மணி தான் 10 வயதாக இருக்கும் பொழுது தானும் இது போன்ற சம்பவங்கள் எதிர்கொண்டதாகவும், இதை தன்னுடைய அம்மா எதிர்த்து கேள்வி கேட்டதால் அந்த படத்தில் இருந்து தூக்கி விட்டார்கள் என்று தெரிவித்த குட்டிமணி, தங்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் இருந்ததை நடிகை பார்வதி, ஸ்ரீரெட்டி, சின்மய ஆகியோர் பேசியதால் அவர்கள் சினிமாவிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள் என்ற வேதனையும் குட்டி பதமினி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகை குஷ்பூ பரபரப்பை ஏற்படுத்துவதில் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை தெரிவித்துள்ளார். அதில் பல வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது, அந்த தயாரிப்பாளர் திடீரென்று குஷ்பூ தங்கியிருந்து ரூமுக்குள் வந்ததாகவும், தன்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த அந்த தயாரிப்பாளர் பேசியபோது நடிகை குஷ்பூ தன்னுடைய காலில் இருந்த செருப்பை காண்பித்து இதுதான் சைஸ் 42, இதை கழட்டுமா என்று கேட்டதும்,

உடனே அங்கிருந்து அந்த தயாரிப்பாளர் சென்று விட்டதாக நடிகர் குஷ்பூ தனக்கு பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை தற்பொழுது தெரிவித்துள்ளார். இப்படி தொடர்ந்து பல முன்னணி நடிகைகள் சினிமா துறையில் பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து மூத்த நடிகர்கள் யாரும் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.