நம்மை காக்கும் ஒரு சூப்பர் சக்தி…. அந்த தெய்வமே தன்னை தேர்ந்தெடுத்ததாக குஷ்பு நெகிழ்ச்சி..

0
Follow on Google News

எண்பது மற்றும் 90 கால கட்டங்களில் சினிமாவில் முன்னணி ஹீரோயின் ஆக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. 1980களில் குழந்தை நட்சத்திரமாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமான நடிகை குஷ்பூ, வருஷம் 16 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அவதரித்தார். தற்போது பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் குஷ்பூ, தயாரிப்பாளர், நடிகை மற்றும் அரசியல்வாதி என்ன பன்முகங்களாக பிசியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் நடிகை குஷ்புவிற்கு கேரளாவின் திருச்சூர் நகரத்தில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது. இந்த பூஜை குறித்து நடிகை குஷ்பூ தனது சோசியல் மீடியாக்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் சில புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நடிகை குஷ்புவின் இயற்பெயர் நக்ளத் கான் ஆகும்,

ஆம் நடிகை குஷ்பூ பிறப்பால் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். சரி, அப்படி நடிகை குஷ்புவிற்கு எந்த கோவிலில் பூஜை நடத்தப்பட்டது மற்றும் அது என்ன பூஜை போன்ற விவரங்களை விரிவாக இங்கு பார்க்கலாம். எண்பதுகளில் தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை குஷ்பூ, 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் அவ்வப்போது மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

மும்பையைச் சேர்ந்த நடிகை குஷ்பூ, தனது எதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரத் தொடங்கினார். ரிக்ஷா மாமா, சின்னதம்பி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாட்டாமை போன்ற படங்கள் குஷ்பூவின் சினிமா கரியரில் குறிப்பிடத்தக்க மாபெரும் வெற்றி படங்களாகும். இவ்வாறு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்த நடிகை குஷ்புவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, நடிகை குஷ்புவிற்கு என ஒரு கோவிலே கட்டும் அளவிற்கு ரசிகர்கள் நடிகை குஷ்பூவை கொண்டாடி தீர்த்த காலமும் உண்டு. இவ்வாறு சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்ற குஷ்பூ பிசியாக பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், இயக்குனர் சுந்தர்சியை காதலித்து மணம் முடித்தார்.இந்து மதத்தைச் சார்ந்த சுந்தர்சியை மணமுடித்ததிலிருந்து இன்று வரை இந்து கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறார்.

இந்த நிலையில் கேரள மாநிலத்தின் திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் சமீபத்தில் நடந்த நாரி பூஜைக்கு நடிகை குஷ்புவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கோவில் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று நடிகை குஷ்பூ இந்த பூஜையில் பங்கேற்றார். மேலும் கோவிலில் நடிகை குஷ்புவுக்கு சிறப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.இதனால் மனம் நெகிழ்ந்த நடிகை குஷ்பூ, “நான் இந்த பூஜை அழைக்கப்பட்டதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன் என்றும்,

அந்த தெய்வமே என்னை தேர்ந்தெடுத்ததாக நம்புவதாகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்”. குறிப்பாக, பிரசித்தி பெற்ற விஷ்ணு மாயா கோயிலில் நடைபெறும் இந்த நாரி பூஜையில் பங்கேற்க ஒரு வருடத்தில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்கும் பெருமையை எனக்கு வழங்கிய அனைவருக்கும் என் நன்றிகள் என்று தெரிவித்த குஷ்பூ ,

தினமும் சாமி கும்பிடுபவர்களுக்கும், நம்மை காக்க ஒரு சூப்பர் சக்தி இருக்கு என்பதை நம்புபவர்களுக்கும் இந்த பூஜை இன்னும் நல்ல விஷயங்களைக் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்த நடிகை குஷ்புவிற்கு ஏராளமான வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.