விஜய் பெர்மிஷன் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் எதுவும் செய்ய முடியாது.. விஜய்யின் நேரடி கண்காணிப்பில் கீர்த்தி..

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் விஜய் தாய் தந்தையினர் கலந்து கொண்டனர். ஆனால் விஜயின் மனைவி சங்கீதா கலந்து கொள்ளவில்லை. பொதுவாகவே விஜய் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தவறாமல் விஜயின் மனைவி சங்கீதா கலந்து கொள்வார்.

ஆனால் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் விஜய் மனைவி சங்கீதா கலந்து கொள்ளாமல் இருந்ததற்கு காரணம் விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கணவர் விஜயை விட்டு சங்கீதா சில மாதங்களாகவே பிரிந்து லண்டனில் வசித்து வருவதாக வருவதாக கிசுகிசு செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

இந்த நிலையில் விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் படங்களில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கமாக இருந்து வருவதால் தான் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதாவுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக கூட கிசுகிசு செய்திகள் வைரலானது. இப்படி விஜய் குறித்து கிசு கிசு செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகையில், அதை உறுதி படுத்தும் விதத்தில் பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் தற்பொழுது சினிமாவில் பெரிதாக எதுவும் வாய்ப்பு இல்லை, அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷுக்கு சினிமாவில் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஹீரோயின் சப்ஜெட் படமான ரிவால்வர் ரீட்டா படத்தை விஜய் மானேஜர் ஜெகதீஸ் தயாரிக்கிறார். இந்த படத்தை ஜெகதீஸ் தயாரிப்பதற்கு பின்னணியில் இருந்து பண உதவி செய்து வருவது விஜய் தான் என்று கூறப்படுகிறது.

மேலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் கதை முதல் அவருடைய கால் சீட் வரை அனைத்தையும் கவனித்து வருவது விஜய் மானேஜர் ஜெகதீஸ் தான் என்றும், அந்த வகையில் கிசு கிசுவில் சிக்கும் நடிகர்கள் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தால், அதில் நடிக்க வேண்டாம் என மறுத்து விடுகிறாராம் ஜெகதீஸ். மேலும் கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்புக்கு செல்வது மட்டுமின்றி, அவர் வீட்டில் இருந்து வெளியே செல்வது முதல் மீண்டும் வீட்டுக்கு திரும்பும் வரை விஜய் மேனஜர் ஜெகதீஸ் நேரடி கண்காணிப்பில் தான் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் உச்சகட்டமாக கீர்த்தி சுரேஷ் குடியிருக்கும் வீடு கூட தன்னுடைய கண்காணிப்பில் இருக்க வேண்டும் என விரும்பிய நடிகர் விஜய், அவர் குடியிருக்கும் நீலாங்கரை வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விஜயின் நண்பன் சஞ்சய் வீட்டு மாடியில் தான் சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் குடியிருந்து வருவதாக செய்திகள் வெளியானது, அதை உறுதி படுத்தும் விதத்தில் கீர்த்தி சுரேஷ் வாகனம் சஞ்சய் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடியோவும் வெளியானது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் கார்டியன் போன்று விஜய் செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், கீர்த்தி சுரேசை கதை சொல்லி புதிய படத்தில் கமிட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு விஜய் மானேஜர் ஜெகதீஸ் தான் ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்பதால் பல இயக்குனர்கள் கீர்த்தி சுரேஷுக்கு பதில் வேறு ஒரு நடிகையை தேடி செல்கிறார்கள், இருந்தும் தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படத்தை முடித்துவிட்டு விஜய்யை வைத்து அட்லீ இயக்க இருக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.