என்னையும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டார்கள்… நடிகை கஸ்தூரி சொன்ன ஷாக்… கூப்பிட்டது யார் தெரியுமா.?

0
Follow on Google News

தற்பொழுது சினிமா நடிகைகளை படுக்கைக்கு அழைத்தது தொடர்பான சர்ச்சை மிகப் பெரிய அளவில் சினிமா வட்டாரத்தில் வெடித்துள்ளது. குறிப்பாக மலையாள சினிமாவில் ஹேமா அறிக்கை வெளியான பின்பு மிகப்பெரிய அதிர்வலையை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பல நடிகைகள் அவர்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றியும், சில பிரபலங்கள் படுக்கைக்கு அழைத்தது குறித்து வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை கஸ்தூரி அவருக்கு நடந்த சில சம்பவங்களை தெரிவித்துள்ளார், அதில் அட்ஜஸ்ட்மென்ட் விஷயத்தை பொறுத்த வரை லஞ்சம் வாங்குவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் வஉள்ள வித்தியாசம் தான், அதாவது ஒரு வாய்ப்புக்காக பெண்களை தங்கள் கூப்பிடும் போது ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பானது.

ஆனால் வலுக்கட்டாயமாக பெண்களை படுக்கைக்கு அழைப்பது என்பது கொள்ளை அடிப்பதற்கு சமம் என தெரிவித்த நடிகை கஸ்தூரி. இந்த மாதிரி பிரச்சனைகளை வெளியே சொன்னால் அந்த நடிகைக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதாகவும், உதாரணத்திற்கு ஏற்கனவே பின்னனி பாடகி சின்மயி தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி வெளியே சொன்ன பின்பு அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் பிழைப்பே இல்லாமல் செய்து விட்டார்கள் என தெரிவித்த நடிகை கஸ்தூரி.

சினிமாவில் எனக்குத் தெரிந்து பல நடிகர்கள் எந்த ஒரு அட்ஜஸ்ட்மெண்டும் செய்யாமல் மிகப்பெரிய உச்சத்திற்கு சென்றிருக்கிறார்கள். இன்னும் சில நடிகர்கள் வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இறுதியில் ஏமாந்தும் போய் உள்ளார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று ஏமாந்து மீண்டும் மீண்டும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து ஏமாந்த நடிகைகளும் இருக்கிறார்கள்.

இதில் ஒரு சில நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, ஆனால் பல நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாந்தவர்கள் பலரும் உள்ளனர் என தெரிவித்த நடிகை கஸ்தூரி. எனக்கு தெரிந்து ஒரு இயக்குனர் கதாநாயகியை எந்த டேக் போனாலும் ஓகே செய்ய மாட்டார். முதல் நாள் முழுக்க முழுக்க ரிடேக் கொடுத்து அந்த நடிகையை சிரமப்படுத்தி விடுவார். ஆனால் மூன்றாவது நாள் வரும் பொழுது முதல் டேக்கில் ஓகே என்று அந்த கதாநாயகியை தேர்வு செய்கிறார் என்றால், எதனால் இப்படி நடந்து கொள்கிறார் என்பது அந்த படப்பிடிப்பில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.

இது போன்று எனக்கும் நடந்துள்ளது என தெரிவித்த நடிகை கஸ்தூரி. ஒரு பிரபல இயக்குனருடன் நான் படுக்கையை பகிரவில்லை என்பதற்காகவே கிட்டத்தட்ட மூன்று படங்களில் இருந்து என்னை தூக்கி விட்டார்கள் என தெரிவித்த நடிகை கஸ்தூரி. மேலும் ஒரு ஹீரோவுடன் என்னால் ஒத்துப் போக முடியாது என்று நானே அந்த படத்தில் இருந்து விலகி விட்டேன்.

அதுபோல் இன்னொரு படத்தை முடித்துவிட்டு அதே நடிகரோட நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்தேன், இப்படி சினிமா உலகில் வெளியே வராத பல விஷயங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது என தன்னுடைய வேதனையை வெளிப்படுத்திய கஸ்தூரி, சினிமாவில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பெண்களுக்கு இதே பிரச்சனை தான் என்று தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்தார்