ஜோதிகா இப்படி செய்யலாமா.? மானம் மரியாதை எல்லாம் போச்சு… தலை குனிந்த சிவகுமார்…!

0
Follow on Google News

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா ஜோதிகா மற்றும் அவர்களது பிள்ளைகள் என அனைவரும் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி குடும்பத்துடன் மும்பையில் குடியேறினர். இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவவே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இப்படியான சூழலில் தற்பொழுது சிவகுமார் குடும்ப மானத்தை காற்றில் பறக்க விட்டுவிட்டார் ஜோதிகா என சொல்லும் அளவுக்கு மிக பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜோதிகா.

நடிகர் சூர்யா 350 கோடி பட்ஜெட்டில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் நடித்துள்ளார். பதினாறு மொழிகளில் வெளியாகவுள்ள கங்குவா திரைப்படம் சூர்யாவின் சினிமா கரியரில் முக்கியமான திரைப்படம் ஆக இருக்கும். ஒரு பக்கம் சூர்யா மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் ஜோதிக்காகவும் மாதவன் நடித்துள்ள சைத்தான் படத்தின் மூலம் பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ஜோதிகாவை தேடி அடுத்தடுத்து நிறைய பாலிவுட் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் கூடிய விரைவில் சூர்யாவையும் பாலிவுட்டில் அறிமுகப்படுத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக சூர்யாவும் பாலிவுட் இயக்குனருடன் பேச்சுவார்த்தையில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை சூர்யா பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டால், அவரும் பேன் இந்தியா ஸ்டார் ஆக மாறிவிடுவார்.அவரது மார்க்கெட் கிடுகிடுவென உயரும். இப்படி கணவன் மனைவி இருவரும் பாலிவுட் சினிமாவில் தடம் பதிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். மும்பையில் வீடு வாங்கி குடியேறியது குறித்து பத்திரிக்கையாளர்கள் சூர்யாவிடம் கேள்வி கேட்டபோது, குழந்தைகளின் படிப்பு மற்றும் தொழில் போன்ற காரணங்களுக்காக மும்பைக்கு வந்திருப்பதாக கூறியிருந்தார்.

என்னதான் மும்பையில் குடியிருந்தாலும் அப்பா அம்மாவை பார்ப்பதற்காக சூர்யா அவ்வப்போது சென்னைக்கு வந்து செல்கிறார். ஆனால் நடிகை ஜோதிகா, மும்பையில் செட்டில் ஆனது தான் சரி தேர்தலுக்கு ஓட்டு போட கூட சென்னை பக்கம் வரவில்லை. கடமையை மறந்து உற்சாகமாக டூர் சென்று விட்டா ர்.இதனால் ஜோதிகா கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டார்.அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

நடிகை ஜோதிகா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்த ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் பங்கேற்று இருந்தார். அந்த விழாவிற்கு அவர் அணிந்து வந்த உடை கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அந்த விழாவில் நடிகை ஜோதிகா கருப்பு நிற பிளேசரில் கலந்து கொண்டிருந்தார். அதில் முன்னழகு தெரியும்படி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். இது தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

இதற்கு முன்பு நடந்து முடிந்த அம்பானி மகன் கல்யாணத்தில் வேஷ்டி சட்டை மற்றும் புடவையுடன் பாரம்பரியமாக கலந்து கொண்ட சூர்யா ஜோதிகா கலந்து கொண்டிருந்தனர். ஆனால் இப்போது ஜோதிகா இப்படிப்பட்ட உடையில் விழாவில் கலந்து கொண்டது தமிழ் ரசிகர்களை முகம் சுழிக்கும் வகையில் அமைத்துள்ளது. மேலும் சென்னையில் ஜோதிகா இருக்கும் வரை கட்டுக்கோப்பான உடைகளை அணிந்து இருந்தார்,

மும்பையில் குடியேறிய பின்பு இந்து போன்ற கவர்ச்சியான உடையை ஜோதிகா அணிந்து பொது நிகழ்வில் கலந்து கொள்வது, சிவகுமார் குடுமபத்துக்கு என இருந்த மரியாதையை காற்றில் பறந்து கொண்டிருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.